Tagged: சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம்

கலை நிகழ்வுகள்-மலர் வெளியீடு-சுவையான திராவிடர் உணவுகளுடன் களை கட்டியது திராவிடர் வாழ்வியல் விழா

கலை நிகழ்வுகள்-மலர் வெளியீடு-சுவையான திராவிடர் உணவுகளுடன் களை கட்டியது திராவிடர் வாழ்வியல் விழா

இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப்படுத்தும் விழா, ‘திராவிடர் வாழ்வியல் விழா’ என திருப்பூரில் சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில், திராவிடர் வாழ்வியல் விழா- திராவிடர் உணவு விழா-கருந்திணை 2013 நிகழ்ச்சியில் திராவிடர் பண்பாட்டு மலரினை வெளியிட்டு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில் அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காவேரி அம்மன் திருமண அரங்கத்தில் கருந்திணை 2013 என்ற பெயரில், திராவிடர் வாழ்வியல் விழாவும் திராவிடர் உணவு விழாவும் எழுச்சியோடு நடைபெற்றது. விழாவின் துவக்கத்தில் மேட்டூர் கருப்பரசன் குழுவினரின் பறை முழக்கம் அரங்கத்தை அதிர வைத்தது. தொடர்ந்து சுயமரியாதைக் கலைப் பண்பாட்டு கழகத்தின் கோவை மாவட்ட அமைப்பாளர் அ.ப. சிவா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகச் செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி,...