Tagged: கோவில்

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடியில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்திட கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 13.9.2013 அன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதி தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். நெல்லை மண்டலச் செயலாளர் கோ.அ.குமார், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகரத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பால். அறிவழகன் மற்றும் பல தோழர்களும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டனர். நாகர்கோயிலில் 13.9.2013 அன்று கழக சார்பில் கோயிலில் முடங்கிடும் தங்கத்தைப் பொருளாதார சீர்கேட்டை தடுப்பதற்குப் பயன்படுத்தக் கோரி நாகர்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வழக்குரைஞர் வே.சதா...