Tagged: கும்முடிப்பூண்டி முகாம்

கும்முடிப்பூண்டி முகாமில் ஈழத் தமிழர் காலை உடைத்த காவல் ஆய்வாளர்

கும்முடிப்பூண்டி முகாமில் ஈழத் தமிழர் காலை உடைத்த காவல் ஆய்வாளர்

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அராஜகம் எல்லை மீறிப் போயுள்ளன. சென்ற 15.03.2016 அன்று சுபேந்திரன் என்ற ஈழத் தமிழர் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளன. இன்று வரை அவரால் கால்களை இயக்க முடியவில்லை. தொடர்ந்தும் அந்தக் கால்கள் இயங்குமா எனபது சந்தேகமே. அந்தக் குடும்பம் அன்றாட வாழ்க்கைக்கு வழியின்றித் தவிக்கிறது. இந்நிலையில் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிடும்படியும், பொய் வழக்குப் போடுவோம், அரசை எதிர்த்து உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் உளவுத் துறையும் காவல்துறையும் சுபேந்திரனையும் அவர் துணைவியாரையும் மிரட்டி வருகின்றனர். சுற்றியும் காவலர்கள் சூழ்ந்து அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். சுபேந்திரன் மாடியிலிருந்து குதித்ததால் கால்கள் உடைந்ததாகக் கதைகட்ட காவல்துறையும் உளவுத்துறையும் மெனக்கெடுகின்றன. முகாமின் தலைவர் கண்ணன் அவர்களையும் அதே காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்து ஜட்டியோடு உட்கார வைத்துள்ளனர். அம்முகாமில் பலரும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டு...