Tagged: எம்.ஜே. அக்பர்

அரசியல் வழியாக – ‘சோதிட நம்பிக்கையாளர்கள்’ எழுப்பும் கேள்விகளுக்கு பதில்

அரசியல் வழியாக – ‘சோதிட நம்பிக்கையாளர்கள்’ எழுப்பும் கேள்விகளுக்கு பதில்

சோதிட நம்பிக்கையாளர்கள் சோதிடமும் ஒரு அறிவியல் தான் என்று முன் வைக்கும் வாதங்களுக்கு அறிவியல் மறுப்பு. எம்.ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில் ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு. 1950களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப் போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே, 1954. இந்தச் சம்பவத்திற்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த மத்தாய் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார். நேரு அவரிடம், “நான் 74 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன்” என்று சொல்லி யிருக்கிறார். சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் என்ற மத்தாய்க்கு நேரு அளித்த பதில்: “இல்லை. குடும்பத்தில் இருந்த ஆண்களின் வயதுகளின் சராசரியைக் கணக்கிட்டேன். சரியாக 74 வருடங்கள், 6 மாதங்கள், 13 நாட்கள் வருகின்றன.”...