Tagged: உயிர் வலி

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம். தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து...

மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு

மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு

வசதி வாய்ப்புப் படைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர். அப்பாவி மக்களை மட்டும் பாதிக்கும் மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென மன்னார்குடியில் நடைபெற்ற ‘உயிர்வலி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேசினார். மரண தண்டனைக்கு எதிரான வரலாற்றுப் பதிவு ‘உயிர்வலி’ (சக்கியடிக்கும் சத்தம்) ஆவணப்பட வெளியீட்டு விழா மன்னார்குடி தமிழ் இனஉணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் திருமண அரங்கத்தில் தமிழின உணர்வாளர் பா.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. ‘உயிர்வலி’ ஆவணப்படத்தை திருவாரூர் மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் இரயில் பா°கர் வெளியிட, மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அனையாவிளக்கு அய்யப்பன் பெற்றுக் கொண்டார். இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின்பேரில் 22 ஆண்டுகாலமாக தூக்குதண்டனை கைதியாக சிறையில் வாடும் பேரறிவாளனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘உயிர்வலி’ ஆவணப்படம் குறித்து பொங்கு தமிழ் இயக்க செயலாளர் மருத்துவர் பாரதிச் செல்வன், தமிழக தலித்...