Tagged: உத்திரமேரூர் நீதிமன்றத்தில்

“என் பிள்ளைகளை கொலை செய்வதாக மிரட்டினார்கள்”: சங்கர்ராமன் மனைவி கண்ணீர் பேட்டி

“என் பிள்ளைகளை கொலை செய்வதாக மிரட்டினார்கள்”: சங்கர்ராமன் மனைவி கண்ணீர் பேட்டி

ஜெயேந்திரனும் அவரது கூட்டாளிகளும் சங்கர்ராமன் கொலை வழக்கில் விடுதலையாகி விட்டார்கள். முதலில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சங்கர்ராமன் மனைவியும், மகளும் இறுதியில் அடையாளம் காட்ட அஞ்சினர். என் பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதே காரணம் என்கிறார், சங்கர்ராமனின் மனைவி, ‘ஜுனியர் விகடன்’ ஏட்டுக்கு (4.12.13) அவர் அளித்த பேட்டி இது. 3369 நாட்கள்… 24 குற்றவாளிகள்… 1873 பக்க குற்றப் பத்திரிகை… 189 அரசு தரப்பு சாட்சிகள்… என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜேயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்துள்ளது புதுவை நீதிமன்றம். தமிழகத்தில் நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்று வேறு மாநிலத்துக் மாற்ற ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்று சங்கர் ராமன் கொலை வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள் நடந்தது வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சி.°.முருகன் கடந்த 27 ஆம்...