Tagged: இந்தியா

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்று, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பேச வேண்டுமே தவிர, அதைப் புறக்கணிப்பது சரியாகாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற பாடம்; சமாதானப்படுத்தல்’ என்ற விசாரணை ஆணையம் – ஆண்டுகள் ஓடியும் எந்த விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலஉரிமை மற்றும் காவல்துறையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளையும் நீதிமன்றம் வழியாக இலங்கை அரசு பறித்துக் கொண்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டது. சிங்களர்களின் இன வெறியை திருப்திப்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆட்சியிடம் இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வடக்கு மாகாணத்தின் முதல்வராக தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட விக்னேசுவரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கூறும்போது, தமிழகத்தில் மட்டும் ஈழ ஆதரவாளர்கள்...

தலையங்கம் : அதிகார மாற்றம்

தலையங்கம் : அதிகார மாற்றம்

‘இந்து இராஷ்டிரத்தை’ உருவாக்கும் கொள்கையைக் கொண்டவர்களிடம் அரசியல் அதிகாரம் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதை மக்களிடம் உணர்த்த விரும்பியதால்தான் திராவிடர் விடுதலைக் கழகம் – இடதுசாரி கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தலித் அமைப்புகளை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட எந்தக் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற பார்வையில் கழகம் எடுத்த முடிவு இது. இப்போது ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற ‘இந்து இராஷ்டிரத்தை’ அமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட்டது. அந்த அமைப்பு களமிறக்கிய நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராகிறார். நாடாளுமன்றம், வாக்குரிமை என்ற “ஜனநாயக” வழிமுறைகளில் ‘இராம இராஜ்யத்தை’ அமைக்கும் முயற்சி என்பதேகூட ஒரு விசித்திர முரண்பாடுதான். பார்ப்பன அதிகாரம் மட்டுமே இராமஇராஜ்யத்தை வழி நடத்தியதாக இராமாயணங்கள் கூறுகின்றன. இந்தியா, இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற குடியரசு என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருக்க வேண்டியவர் ஒரு...