Tagged: ஆணவப் கொலை

ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய  கழகத் தோழர்கள்

ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்

உடுமலையில் தலித் பொறியியல் பட்டதாரி சங்கர் படுகொலையைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஆலங்குடிப் பகுதியைச் சார்ந்த வினோத் எனும் தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா என்ற இடைநிலைச் சாதியைச் சார்ந்த பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்ய திட்டமிட்டனர். பிரியங்கா அவரது பெற்றோரால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுவரும் செய்தியை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் கார்த்திகேயன், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மணிகண்டன், உடனே முகநூலில் இதைப் பதிவிட்டனர். ‘உடனே இந்தப் பெண்ணை காப்பாற்றுங்கள்’ என்று அவர்கள் பதிவிட்ட செய்தியால் மனிதநேயம் கொண்ட ஏராளமானோர் ‘ஷேர்’ செய்தவுடன் காவல்துறை நடவடிக்கை எடுக்க முன் வந்தது. அந்தப் பெண்ணை மீட்டு திருச்சியில் பெண்கள் விடுதி ஒன்றில் காவல்துறை சேர்த்திருக்கிறது. இந்த செய்தியை ‘ஜூனியர் விகடன்’ ஏடு (30.3.2016) பதிவு செய்துள்ளது. ஜூ.வி. வெளியிட்ட செய்தி: “மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை எனப் பல ஆக்கப்பூர்வமான ...