பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 அன்று பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் அருகில் தலைவர் கொளத்தூர் மணியையும், தோழர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர் கி. திருவேங்கடம், ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பாளர் க.சொ. சிவசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட கழக அமைப்பாளர்இரா. காளிதாசு, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் கு.பாரி, நல்லக்கோட்டை ஒன்றிய செயலாளர் பெ. முருகன், வடசேரி கழகத் தோழர் அ.மா. பிரபாகரன், மன்னார்குடி கழகத் தோழர் செந்தமிழன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் இதழ் 26122013

You may also like...