Author: News DVK

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?…  – விடுதலை இராசேந்திரன்.

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?… – விடுதலை இராசேந்திரன்.

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு பிறகு அந்த அறிக்கையை திருத்தி எழுதித் தருமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. அதில் திருத்துவதற்கு எதுவும் இல்லை என்று ஆய்வாளர் மறுத்துவிட்டார். ஆய்வாளர் அமர்நாத் மீண்டும் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்கப்பட்டுளளார். இப்போது அந்த அறிக்கை போதுமானது அல்ல, மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் சேக்வாத் சென்னையில் பேட்டியளித்து இருக்கிறார். ஆய்வாளர் அமர்நாத் பாஜக விரும்புகிறபடி அறிக்கையை திருத்தி அனுப்பி இருந்தால் அதை வெளியிட்டு இருப்பார்கள். இப்போது ஆர்எஸ்எஸ் ரசாயன பரிசோதனை ஆலைக்கு அனுப்பி சோதனை செய்த பிறகு அதை அங்கீகரிப்பார்கள் போலும். வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி என்ற ஆறு எங்கே இருக்கிறது, என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதைக் கண்டுபிடிப்பதற்காகவே பல கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இன்னமும் ஆண்டுகணக்கில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு...

‘முருகனை’ அவமதிக்கும் சங் பரிவாரங்கள்

‘முருகனை’ அவமதிக்கும் சங் பரிவாரங்கள்

முருகக் கடவுளை பாஜக தலைவராக மாற்றிவிட்டது மதுரை அரசியல் மாநாடு. இவர்களைவிட முருகனை அவமதிப்பவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. கர்ப்பக்கிரகத்தில் வேத மந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்தி உடையவனாக அறிவிக்கப்பட்ட முருகனை இவர்கள் நம்பவில்லை.அதனால் தான் மதுரை மாநாட்டு திடலுக்கு இழுத்து வந்து அங்கே செட்டுகளைப் போட்டு கர்ப்பக்கிரக முருகனை விட ‘செட்டுமுருகன்’ தான் எங்களுக்கான தலைவன் என்று மதுரை மாநாடு அறிவித்திருக்கிறது. உண்மையிலேயே இவர்களுக்கு முருக பக்தி இருந்திருக்கும் என்று சொன்னால் என்ன செய்திருக்க வேண்டும்? முருகன் கோவிலுக்குப் போய் இந்து விரோதிகளை சூரசம்காரம் செய்; திராவிடத்தை அழித்து ஒழிக்க வெளியே வா என்று டிக்கெட் வாங்கி அர்ச்சனை செய்திருக்க வேண்டும். ஆனால் முருகன் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த மாட்டான் என்று நம்பிக்கை இழந்து தான் அரசியல் மேடைக்கு கடத்திவந்து கடவுளை குறியீடாக்கி விட்டனர். குறிஞ்சி நிலத் தலைவனாகக் கருதப்படும் முருகன் காலத்தில் இந்து மதம் என்ற...

முழக்கத்திற்குப் பாராட்டு!

முழக்கத்திற்குப் பாராட்டு!

கொளத்தூரில் நடைபெற்ற நாத்திகர் விழா நிகழ்ச்சியில் மாநாட்டில் மூன்றாவது தீர்மானமாக கணவன் இறந்த பிறகு பெண்களுக்கு நடக்கும் சடங்குகளின் தடுக்க கோரி மூடநம்பிக்கைகளில் இது கொடூரமான மூடநம்பிக்கை என்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் இருப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது, படிக்கிற போது நா தழுதழுக்கிறது. அதேபோல கடந்த வாரம் வந்த முழக்கத்தில் ‘நாத்திகர் விழா சிந்தனை இரண்டு தொகுப்பில்’ 1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பு கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதற்கு கீழே இருக்கிற கட்டுரையில் ஆசிரியர் ஊசி ஒன்று எனக்கு வேண்டும் மாணவர்கள் வாங்கி வர வேண்டும் என்று சொல்லி ஒரு மாணவர் கிளம்ப எல்லோருமாக சேர்ந்து வாங்கி வருகிறோம் என்று, உடன் இருந்த மாணவர்களும் உடன் செல்ல அவர்கள் வாங்கி வந்த விதமும் அந்த ஊசியின் கதையும், தெருவில் இழுத்து வருகிற தேரின் கதையையும் எளிமையாக புரிய வைத்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நா...

கோவையில் கலைஞர் பிறந்தநாள் விழா!

கோவையில் கலைஞர் பிறந்தநாள் விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கலைஞர் பிறந்த நாள் கூட்டம் நடைப்பெற்றது. திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், சிவானந்தா காலனி திமுக பகுதிச் செயலாளர் டெம்போ சிவா, தமிழ்ப்புலிகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் இராமச்சந்திரன், கோவை குமார், விசிக மாவட்ட செய்தி அமைப்பாளர் கோவை ராசா, திமுக முனீர் அகமது, திக தோழர் ராஜா, திவிக மாநகரத் தலைவர் நிர்மல், சதீஷ், மாதவன், ஸ்டாலின் ராஜா கதிரவன் மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

பாலஸ்தீன ஆதரவுக் குழு நடத்திய பாலஸ்தீன விடுதலைப் பேரணி 21.06.25 அன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதான த்தில் தொடங்கி எழும்பூர் ரவுண்டானா அருகில் நிறைவு கண்டனக் கூட்டமாக நிறை வடைந்தது. கண்டனக் கூட்டத்தில் குழந்தைகளைத் திட்டமிட்டு கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்! காசா மீதான இனஅழிப்புப் போரை நிறுத்தக்கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி அவர்கள் உரையாற்றினார். பேரணியில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் , மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தட்சணாமூர்த்தி, ஏசு குமார், தினகரன் மற்றும் கழக தோழர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக குடிஅரசு மற்றும் சுயமரியாதைஇயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் 10.06.2026 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணம் பகுதியில் வே.அரிதாசு தலைமையில் நடைபெற்றது. யாழ் வெள்ளிங்கிரி வரவேற்புரை ஆற்றினார். கோவன் கலைக்குழுவின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர், ஆசிரியர் சிவகாமி (தலைவர், தமிழ்நாடுஅறிவியல் மன்றம்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழக தலைவர் கொளத்தூர் மணி, காசு.நாகராசன் (திராவிட இயக்கத்தமிழர் பேரவை) சிறப்புரையாற்றினர். நிகழ்வில் தினேசு குமார் கழகத்தில் தன்னை கழகத்தில் இணைத்து கொண்டார். தோழருக்கு கழகத் தலைவர் புத்தகம் வழங்கினார். 15 பேர் உடற் கொடை வழங்க முன்வந்துள்ளனர். இதற்கான சான்றிதழை தோழர் அறக்கட்டளைத் தலைவர். சாந்தகுமார் மற்றும் கழக தலைவர் கொளத்தூர் மணி வழங்கினர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், பொள்ளாச்சி கழக தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு...

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் மகன் கி.பிரபாகரன், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் நடராஜ் மகள் ந.கஸ்தூரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு விழா ஆனைமலை பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் 11.06.2025 புதன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை ஏற்று தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. யாழ்.வெள்ளிங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இணையேற்பினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், வேலூர் மாவட்டச் செயலாளர் சிவா, சேலம்...

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலையில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. `முதலில் ஒழிக்கப்பட வேண்டியது, `வர்க்க வேறுபாடா`, `சாதி வேறுபாடா’ என்பதில் தந்தை பெரியாருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே சாதியப் பிரச்சினையுடன் வர்க்க அடிமைத்தனத்தையும் ஒழிக்க, பண்ணை ஆதிக்கத்துக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடியது பெரியாரால் தொடங்கப்பட்ட `திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’. அப்படி ஒரு போராட்டத்தால் பலன் அடைந்த கிராமம்தான் இடையாற்று சதுர்வேதிமங்கலம். 1950-கள் வரை லால்குடி சுற்றுவட்டாரம் முழுவதும் கூகூர் பரமசிவம்பிள்ளை, தாத்தாச்சாரியார், மணக்கால் பாப்பாத்தி அம்மாள், கொண்டையம்பட்டி செட்டியார் என விரல் விட்டு எண்ணக்கூடிய சில பண்ணையார்களிடம்தான் இருந்தன. அதில் கொள்ளிடக்கரையில் உள்ள ஒரு...

`மனிதத்தை’ போற்றுவோரே கடவுள், மத மறுப்பாளர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(4)

`மனிதத்தை’ போற்றுவோரே கடவுள், மத மறுப்பாளர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(4)

உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரி. இஸ்ரேலில் பிறந்தவர் இப்ரு பல்கலைக்கழக பேராசிரியர். மனித குல வரலாறு, வருங்கால வரலாறு, என்று அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுதும் 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. மூன்றாவதுதாக அவர் எழுதி உலக சாதனை படைத்துள்ள நூல் “21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” – கடவுள் மதத்தை மறுக்கும் மதச்சார்பின்மை குறித்து அவர் எழுதியுள்ளதின் ஒரு பகுதி மதச்சார்பற்ற சித்தாந்தம் என்றால் என்ன? உண்மையிடத்தில்தான் மதச்சார் பின்மைவாதிகள் அர்ப்பணிப்புக் கொண்டு ள்ளனர். தலையாய என்பது நேரடிக் கண்காணிப்பு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அமைகிறதே அன்றி, விசுவாசத்தின் அடிப்படையில் அல்ல. மதச்சார்பின்மைவாதிகள் உண்மையை நம்பிக்கையோடு போட்டுக் குழப்பிக் கொள் வதில்லை. ஏதோ ஒரு கட்டுக்கதையில் மிக வலிமையான ஒரு நம்பிக்கை உங்களுக்கு மூளையில் உளவியலையும், உங்கள் குழந் தைப் பருவத்தையும், இருந்தால், உங்கள் கட்டமைப்பையும் சுவாரசியமான விஷயங்...

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் 21-06-2025 மாலை 5 மணி அளவில் வ.உ.சி திடல் (செங்காடு) அவினாசி பகுதியில் ஒன்றிய அரசே! கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடு எனக் கோரி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய கழகம் சார்பாக கையெழுத்து இயக்கம், மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் திவிக சார்பாக மாவட்டச் செயலாளர் முகில்ராசு கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

சமஸ்கிருத படை எடுப்பு

சமஸ்கிருத படை எடுப்பு

2014 ஆண்டிலிருந்து 2025 வரை சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி 2,533 கோடி ரூபாய் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கும் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 13 கோடி ரூபாய் மட்டுமே. சமஸ்கிருதத்தை விட 22 மடங்கு தமிழுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கும் ஒதுக்கிய நிதியை விட 17 மடங்கு கூடுதலாக சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் மாநிலம் இல்லை. சமஸ்கிருதம் தெரிந்தவர்களாக பதிவு செய்தவர்கள் 24,821 பேர் தான். அவர்கள் கூட சமஸ்கிருதத்தில் உரையாடுவது இல்லை. சமஸ்கிருத மந்திரங்களை மனப்பாடம் செய்து வழிபாடுகளை நடத்தும் வேத பார்ப்பனர்கள் கூட வீடுகளில் சமஸ்கிருதம் பேசுவது இல்லை. கல்லூரிகளில் சமஸ்கிருதப் பட்டப்படிப்புகளுக்கு தொடர்பு மொழி சமஸ்கிருதம் அல்ல, ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்திற்கு தமிழைப் போல் தனி எழுத்து...

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

ஆங்கிலம் விலங்கல்ல; விலங்கை உடைக்கும் கருவி!

ஆங்கிலம் விலங்கல்ல; விலங்கை உடைக்கும் கருவி!

`இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அவமானமாக உணர்வார்கள்’ என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து, இந்தியா முழுவதும் விமர்சனம் செய்யப்பட்டதுடன், கேலியாகவும் பார்க்கப்பட்டது. இப்போது அவரது கருத்து, அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஆங்கிலம் தொடர்பாக அமித் ஷாவின் கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. முக்கிய தலைவர்களின் வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் பட்டியலை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர் பியூஷ் கோயல் மகன் மற்றும் மகள் ஆகியோர் ஹார்வர்டு பல்கலையிலும், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் பிள்ளைகள் பாஸ்டன் பல்கலையிலும் படித்துள்ளனர். அமைச்சர்கள், சிவராஜ் சிங் செளகான், ஜோதிராவ் சிந்தியா, ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் பிள்ளைகள் மேற்கு நாடுகளில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில்தான் பயின்று வருகின்றனர். ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் வெளிநாட்டில் படித்தவர்கள்தான். ஆங்கிலம் கற்பதற்கு வெட்கப்பட வேண்டும் எனக் கூறும் அமித் ஷா, அவர்கள் அமைச்சரவை...

புண்படுகிறது என்ற கூக்குரலுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி!

புண்படுகிறது என்ற கூக்குரலுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி!

மத உணர்வைப் புண்படுத்துகிறார்கள் என்று எதற்கெடுத்தாலும் கூறிக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதும் சங்கிகளின் வழக்கமாகிவிட்டது. கமலஹாசனின் `தக் லைஃப்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் வழியாக கருத்துரிமையை நிலைநாட்டி இருக்கிறது. தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கமலஹாசன் பேசியதற்காக கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த பேச்சுக்காக கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. இப்போது உச்ச நீதிமன்றம் எவரையும் மன்னிப்பு கேட்க வைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குக் கிடையாது, என்று கர்நாடக நீதிமன்றத்தின் தலையில்குட்டு வைத்திருக்கிறது. படத்தைத் திரையிடவும் உத்தரவிட்டுள்ளது. தணிக்கைக் குழு அனுமதித்ததற்குப் பிறகு ஒரு படத்தை திரையிட முடியாது என்று சட்டத்தை எவரும் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள் என்று கூறி கருத்துரிமை பறிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது...

நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!

நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!

மாணவர் தகுதியை நிர்ணயிக்கும் நுழைவுத்தேர்வு முறைகள் தோல்வி அடைந்து வருகின்றன. மாணவர் அனைவரும் ஒரே தேர்வை எழுத வேண்டி இருப்பதால், இத்தகைய நுழைவுத் தேர்வு முறையின் வழியாக, எவ்விதக் குளறுபடிகளும் இல்லாத, நியாயமான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில், நுழைவுத் தேர்வுகள் சட்டபூர்வமானதும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. உண்மையில், கவனமாக ஆய்வுசெய்து பார்த்தோமேயானால், நுழைவுத் தேர்வு முறை குறித்த கூற்றுகளும் நம்பிக்கைகளும் கேள்விக்கு உரியவையாக ஆகிவிடுகின்றன. மகாராஷ்டிரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுமத்தில் ஆள்சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றபோது, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகிவிட்டன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் நாட்டையே உலுக்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த வியாபம் தேர்வு முறைகேடு களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மாணவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருந்தது அம்பலமாகியது. எண்ணற்ற மர்ம மரணங்களையும் நாம் கேள்வியுற்றோம். நீட் நுழைவுத் தேர்வு குறித்த சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை...

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் – ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல்உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து...

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

தாய் தமிழர் இயக்கம் நடத்திய அறிவரண் தளபதி பொட்டு அம்மான் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை செங்குன்றத்தில் டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய இனமுரசு சத்யராஜ், நூலை மதிப்புரை ஆற்றிய திவிக-புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், நூலைப் பற்றி அறிமுக உரை மேச்சேரி தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர். திருவல்லிக்கேணி பகுதியில் உயர்நீத்த கழகத் தோழர்கள் பத்ரி நாராயணன், தமிழரசு, கண்ணன், குமார் ஆகியோரின் குடும்பத்தினர் நூல்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்விற்கு கழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, துணைச் செயலாளர் இராவணன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவி பாரதி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

இலக்கியா-பிரகாஷ் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

இலக்கியா-பிரகாஷ் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் இலக்கியா- பிரகாஷ் சுயமரியாதை ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு புதுவை அரியாங்குப்பத்தில் நடைபெற்றது. காசு.நாகராசன் (அமைப்பு செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) வாழ்த்துரை வழங்கினார். சடங்குகளால் மணமக்கள் படும் தொல்லைகளை, அவமதிப்புக்களை எடுத்துரைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இணையேற்பை நடத்தி வைத்து மந்திரங்கள் அதன் வழியாக சடங்குகள் மூலம் அடிமைத்தனத்தைத் திணிக்கும் பார்ப்பன புரோகித திருமண முறையும், எவ்வித சடங்குகள் இல்லாமல் நடைபெறும் சுயமரியாதைத் திருமணம் பற்றி விளக்கிப் பேசினார். நிறைவாக மணப்பெண் இலக்கியா பேசுகையில் “பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசை ஆசையாக வளர்க்கிறார்கள் ஆனால் அவர்களின் சுய விருப்பத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஜாதி, மதத்தை காரணம் காட்டி பல பேர் இல்லறம் சரியாய் அமைவதில்லை. ஆகவே பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். பிள்ளைகளின் சுய விருப்பத்தை பாருங்கள், ஜாதி, மத, சொந்தக்காரர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். என்னுடைய குடும்பம் ஆச்சாரமான கடவுளை நம்பும்...

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

இப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் மாதிரி மங்கலம் என்ற பார்ப்பனர்கள் தானம் பெற்ற ஊரில் பெரியார் இயக்கம் நடத்திய ஜாதி ஒழிப்பு புரட்சி பற்றி கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி… பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். அம்பேத்கரின் `மகர்’ போராட்டத்தை மாதிரிமங்கலத்தில் சத்தமில்லாமல் செய்துகாட்டிய துரைசாமி அத்தோடு நிற்கவில்லை. பண்ணையார்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த சுயமரியாதைப் போராட்டத்தால், 1960-களில் அங்கே இருந்த தலித் மக்கள் இறப்புக்குப் பறை அடிக்கச் செல்வதை நிறுத்தினர். இறந்துபோன மாட்டை தூக்கச் சொல்வதும் வழக்கொழிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் சட்டை அணிந்தனர், காலில் செருப்பு போட்டனர், ஊர்த்தெருவுக்குள் நடக்கத் தொடங்கினர். குத்தகை பார்த்த பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரை, ராமாமிர்தம் அய்யர் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்த செய்திகேட்டு, இருவரையும் மீட்ட துரைசாமி, அந்த வீட்டையே கொளுத்தி விட்டார். இச்செயல்களால் கொந்தளித்துப்போன பண்ணையார்கள், துரைசாமியோடு நெருக்கமாக...

நாத்திகர் மரபு: நீதிமன்றம் தரும் வெளிச்சம் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(3)

நாத்திகர் மரபு: நீதிமன்றம் தரும் வெளிச்சம் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(3)

2014 ஆகஸ்ட்18-ம் தேதி மேட்டூரில் கழக சார்பில் நடந்த நாத்திக பேரணிக்கு முதலில் காவல்துறையில் அனுமதி மறுத்தது நீதிமன்றம் வழியாக அனுமதி பெறப்பட்டது நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து புரட்சி பெரியார் விளக்கம் நாத்திக மரபு நீதிமன்றம் தரும் வெளிச்சம் என்ற தலைப்பில் எழுதிய தலையங்கம் இது…. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி முடித்த மேட்டூர் நாத்திகர் பேரணிக்கும் வழமைபோல காவல்துறை அனுமதி மறுத்து. உயர் நீதிமன்றத்தின் வழியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. விநாயகர் சதுர்த்தியைக் காரணம் காட்டி காவல்துறை கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தமது ஆணையில் நாத்திக மரபு குறித்துப் பதிவுசெய்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். “ஆத்திகம்-நாத்திகம் இரண்டுமே இந்திய மரபில் ஒன்றுக்கொன்று உதவி வந்திருக்கிறது. இரண்டில் எந்த ஒன்றையும் ஒழிக்கவோ. புறந்தள்ளவோ முடியாது, இரண்டு கருத்தியல்களும் ஒன்றை ஒன்று எதிர்த்தாலும், இரண்டுமே சமூகப் பிணைப்பை வலிமைப் படுத்து வதற்கான இழையோட்டத்தை வழங்கி யிருக்கிறது.” எனவே, இதுபோன்ற...

நாத்திகர்கள் எண்ணிக்கை உயர்வு!

நாத்திகர்கள் எண்ணிக்கை உயர்வு!

உலகளவில் மத நம்பிக்கையில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது Pew Research Centre நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2010–2020 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் 27 கோடி பேர் தங்கள் மதத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். நாத்திகர்களின் மொத்த மக்கள் தொகை 190 கோடியாக உயர்ந்துள்ளது. அய்ரோப்பா, யு.எஸ்.ஏ., ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள கிறித்தவர்களே பெரும்பாலும் மத நம்பிக்கையில் இருந்து வெளியேறியுள்ளனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

கடவுளுக்கு மனிதநேயம் கிடையாதா?

கடவுளுக்கு மனிதநேயம் கிடையாதா?

எதிர்காலக் கனவுகளையும் மகிழ்ச்சியான உணர்வுகளையும் சுமந்து சென்ற 246 மனித உயிர்கள் பலியாகி விட்டன. ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விழுந்து நொறுங்கியது, என்ற செய்தி மனிதத்தை இடித்து நொறுக்கி விட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் டாட்டாவிடம் விலை பேசி விட்டது இன்றைய ஆட்சி. தற்போது ஒன்றிய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் எந்த ஒரு விமான சேவையும் இல்லை. விபத்துகள் நிகழவில்லை என்றாலும் போயிங் 787 விமானம் பாதுகாப்பானது அல்ல என்ற குற்றச்சாட்டுகள், 2011-ஆம் ஆண்டிலிருந்து வரத் துவங்கி விட்டன; பயணிகள் சேவை; விமான கட்டமைப்பு கோளாறு; தரமற்ற உதிரி பாகங்கள்; இணைப்புக் கோளாறு என்று தொழில்நுட்ப ரீதியாகவும் சேவை ரீதியாகவும் குற்றச்சாட்டுகள் வரத் துவங்கின,… ஏர் இந்தியா நிறுவனம் இவைகளை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த விமான உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பொறியாளர்கள் இதன் ஆபத்து குறித்து பிபிசி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர்....

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் கிராமத்தில் இருந்து வந்த ஒரு தம்பதியினர் முட்டை பிரியாணி சாப்பிட்டார்கள் என்பதற்காக கோயில் தீட்டாகிவிட்டது என்று கூறி, தீட்டு கழிக்கும் சடங்குகளையும் யாகங்களையும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் அசைவம் சாப்பிடுகிறவர்கள்தான்! அவர்களை கடவுள் ஏற்றுகொள்கிறார், ஆனால் அவர்கள் சாப்பிடுகிற அசைவ உணவு ஆண்டவனுக்கு தீட்டு என்று சொல்லி அசைவ உணவுக்காரர்களையே ஆரியம் அவமதிக்கிறது. ஆண்டவனின் உணவு பியூர் வெஜிடேரியன் என்று இவர்களுக்கு யார் சொன்னது? அர்ச்சகராக இருக்கிறவர்கள் சைவ உணவுக்காரர்களாக இருக்கிறார்கள், என்பதற்காக கடவுளையும் சைவத்திற்கு இவர்கள் மாற்றிக் கொண்டு விட்டார்களா? அசைவ உணவுக்காரர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னால் கோயில்களை இழுத்து மூடி விட வேண்டியதுதான். பெரும்பான்மை மக்களை இப்படி புண்படுத்துகிறவர்கள்தான் இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள் என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வருகிறார்கள். மதக்கலவர நோக்கத்தோடு மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகிறது பாரதிய ஜனதா கட்சி. முருகன்...

100 விழுக்காடு!

100 விழுக்காடு!

கல்விக்காக இந்து வேத மதம் தனித்துறை ஒன்றை உருவாக்கி அதன் அதிகாரத்தை சரஸ்வதி என்ற கடவுளுக்கு ஒதுக்கியது, பள்ளிகளில் சரஸ்வதி படமாக தொங்கினார். ஆனால் `சூத்திர’மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. கல்விக்காக ஒரு கடவுள் இருந்தும் ஏன் மக்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்ற கேள்வியை பெரியார் இயக்கம் கேட்டது. `சூத்திரர்களுக்கு’ கல்வியை தராதே என்ற மனுதர்மத்தை அமல்படுத்துவதிலேயே தான் பார்ப்பனர்கள் குறியாக இருந்தார்கள். 1952-ல் தேர்தலில் நிற்காமல் மேலவை வழியாக முதலமைச்சர் பதவிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஜாதித் தொழிலை பயிற்றுவிக்கும் குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெரியார் இயக்கம் போராடி அதை ஒழித்தது. சென்னை திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் “நீங்கள் படிக்க வந்து விட்டால் துணி துவைக்கும் தொழிலை யார் செய்வது?” என்று கேட்டார் ராஜகோபாலாச்சாரி. சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தியதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட 6000 அரசுப் பள்ளிகளை அவர் மூடினார். இந்த...

தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 12.06.25 வியாழன் அன்று மேட்டூரில் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது “குடியரசு 100” எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட 3 புத்தகங்கள் அடங்கிய தொகுதியை கழகத் தலைவர் அவர்கள் முதல்வருக்கு வழங்கினார். மேலும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் அவர்கள் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பாக கழகம் வெளியிட்ட “ஆரிய மாடலா? திராவிட மாடலா?” நூலை முதல்வருக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன், மேட்டூர் சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு  மாநில அரசே செலவிடுகிறது (ஆதாரங்களுடன் ஆங்கில நாளேடு கட்டுரை)

ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு மாநில அரசே செலவிடுகிறது (ஆதாரங்களுடன் ஆங்கில நாளேடு கட்டுரை)

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி தர மறுத்து வரும் ஒன்றிய ஆட்சி, மற்றொரு உண்மைக்கு மாறான செய்தியை பரப்புகிறது. ஒன்றிய ஆட்சியின் திட்டங்களை தமிழ்நாடு அரசு தனது திட்டங்களாக அறிவிக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகிறார்கள். மோடியின் படத்தோடு அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை தமிழ்நாடு அரசுதான் செலவிட்டு வருகிறது என்பதே உண்மை. இதுகுறித்து இந்து ஆங்கில நாளேடு விரிவான செய்தியை வெளியிட்டு உள்ளது. “ஒன்­றிய பா.ஜ.க. அரசு, தமிழ்­நாட்­டுக்­கான எந்­தப் புதிய சிறப்­புத் திட்­டத்­தை­யும் தர­வில்லை. அவர்­கள் மிகச் சில திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கும் பண­மும் முழு­மை­யாக இல்லை. அதில் கூடு­தல் பணம் போட்டு மாநில அர­சு­தான் அந்த திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்டு இருக்­கி­றது. குடி­நீர் திட்­ட­மாக இருந்­தா­லும்– வீடு­கட்­டும் திட்­ட­மாக இருந்­தா­லும் – ஒன்­றிய அரசு ஒதுக்­கும் பணத்தை வைத்து செயல்­ப­டுத்த முடி­யாது என்­ப­தால் மாநில அர­சு­தான் கூடு­தல் பணம் கொடுக்­கி­றது. சில திட்­டங்­க­ளுக்கு ஒன்­றிய...

தேசிய கூட்டணியில் முருக பகவான்

தேசிய கூட்டணியில் முருக பகவான்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையப் போகின்றன என்று எடப்பாடியும் நயினாரும் பேசாத நாள் இல்லை. அது வந்தே விட்டது கூட்டணிக்குள் கட்சிகளை இழுக்க அமித் ஷாவின் கீழ் இரண்டு படைகள் தயார் நிலையில் உள்ளன. ஒன்று, அமலாக்கப்படை! மற்றொன்று மத்திய புலனாய்வுப் படை! இப்போது மூன்றாவதாக ஒரு படை கிளம்பியுள்ளது, இது அறுபடை. ஆமாம்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப்போகிறார் முருக பகவான். மதுரை மாநாட்டுக்கு அறுபடை வீடுகளுடன் முருகன் வந்து சேர்ந்து விட்டார்! அதுவும் தனது மயில் வாகனத்தில், விபத்துக்கள் ஏதும் இன்றி பாதுக்காப்பாக வந்து விட்டார்! மாநாட்டுக்கு மாதிரி கோயில்களை முகப்புகளாக்கி அங்கே பூஜை சடங்குகளோடு பிரசாதம் வழங்கப் போகிறார்களாம். இது ஆகமத்துக்கு எதிரானது என்று அனைத்து ஜாதி அர்ச்சகர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “இது எங்கள் கட்சி முருகன்; ஆகம முருகன் அல்ல” என்று வாதாடி நீதிமன்றத்தின் அனுமதியையும் பாஜகவினர் வாங்கி...

‘முன்’ மாதிரிமங்கலம்!

‘முன்’ மாதிரிமங்கலம்!

பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். ஆரிய ஆதிக்கத்தின் மீது, திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக நிகழ்த்தி வரும் சம்மட்டி அடியால், முந்நூறு ஜாதிகள் சமூக தளத்தில் மூன்று பிரிவுகளாகச் சுருங்கிவிட்டன. உயர் ஜாதி, இடைநிலை ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற 3 பிரிவுகள் மட்டுமே மெல்லியதான கோடுகளுடன் மிச்சமிருக்கின்றன. சுயமரியாதைத் திருமணங்கள், சமத்துவபுரங்கள், தீண்டாமையைக் கடைப்பிடிக்காத கிராமங்களுக்குப் பரிசு போன்ற திட்டங்களின் ஊடாக இந்த 3 கோடுகளையும் கரையச் செய்கிற பணியை `திராவிட மாடல்’ அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், ஓர் அரசு மட்டுமே செய்துவிடக் கூடிய பணி அல்ல இது. சமூகமும் சேர்ந்து எடுக்க வேண்டிய தீர்க்கமான முடிவு அது. அந்த முடிவுக்கு ஆகச்சிறந்த முன் உதாரணம்தான் மாதிரிமங்கலம். மயிலாடுதுறைக்கு அருகே உள்ள அரங்கங்குடியைச் சேர்ந்த துரைசாமி, நீதிக்கட்சிக் கொள்கையின்பால் ஈர்க்கப் பட்டவர். பார்ப்பனிய அதிகார வர்க்கத்துடன் மோதல், தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம்...

தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லு     ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார் ராகுல்

தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லு ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார் ராகுல்

ராகுல் காந்தியின் இந்தக் கட்டுரையை அனைத்து எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் – என்பதற்கு இணையானது இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதும் ஆகும். “மராட்டிய மாநிலத் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது. அதில் நடந்த மோசடியை மறைக்க எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி, அது தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் இருந்தே அப்பட்டமாக தெரிகிறது. அதனை நான் உங்களுக்கு பட்டியலிட்டுச் சொல்கிறேன்” என்ற முன்னோட்டத்துடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அனைத்து எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த கட்டுரை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் – என்பதற்கு இணையானது இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன்...

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”   நாத்திக விழா சிந்தனை(2)

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” நாத்திக விழா சிந்தனை(2)

1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதில் அந்த வாசகங்களை விளக்கி பெரியார் எழுதிய கட்டுரையைக் கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதுகுறித்து மறைந்த பேராசிரியர் இராமநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். கடவுளை வணங்குகிறவர்களைக் காட்டுமிராண்டிகள் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தியவர் பெரியார் அதற்கான காரணம் என்ன தெரியுமா…. காட்டுமிராண்டி மக்களுக்கும், மற்ற மக்களுக்கும் என்ன வேறபாடு? எல்லோரும் மக்கள்தான். பொது இயல்பில் வேறுபாடில்லை. நடைமுறையில் வேறுபாடு உண்டு. காட்டுமிராண்டி மக்கள் வாழ்வில் அறிவொடுபட்ட செயல்முறைகள் இல்லை. மானம் இல்லாதவர். அறிவும் மானமும் இல்லாமல் விலங்கொடு விலங்காக வாழ்பவர். மனிதனுக்கு மற்ற உயிரினங்களைவிடப் பகுத்தறிவு இருக்கின்றது. அந்த அறிவைக்கொண்டே மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு உலகில் முன்னேறியிருக்கின்றான். ஆயினும் அவன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு முன்னேற முடியாமல் கடவுள் கருத்தும், இதனை ஒட்டி எழுந்துள்ள கற்பனைகளும்,...

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

தோழர் மடத்துக்குளம் மோகன் குடும்பத்தினர் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.3000/ கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்களிடத்தில் வழங்கினார்கள். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம்12062025இதழ்

திராவிடம் வென்றே தீரும்!

திராவிடம் வென்றே தீரும்!

பாமகவை மருத்துவர் ராமதாஸ் தொடங்கியபோது பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார். இப்போது பாமகவில் நடக்கும் குடும்பச் சண்டையை தீர்த்து வைக்க ராஜகுரு குருமூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு குருமூர்த்தி யார் என்று தெரியாது, ஆனால் அவர்தான் பாஜகவின் அதிகார மய்யம். அதிமுகவை இரண்டாக உடைத்ததில் இவரது பங்கு மிகவும் பெரியது. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் செய்ய உத்தரவிட்டவர் இதே ஆடிட்டர்தான். அதிமுகவினர் ஆண்மையற்றவர்கள்; காலில் விழக்கூடியவர்கள் என்று அவமானப்படுத்தினார். ஒரு வழியாக எடப்பாடியின் அதிமுக பாஜகவின் பிடிக்குள் வந்துவிட்டது. தினகரன் ஓபிஎஸ் குழுக்கள் பாஜகவின் உத்தரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. இப்போது பாமகவும் பாஜக பிடிக்குள் போகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும்”சூத்திர” அண்ணாமலைகளோ, நயினார்களோ, தமிழிசைகளோ சாலை ஓரத்தில் கூவுவதற்குத்தான் உரிமை. ஆனால் கட்சியின் அதிகாரம் மக்களுக்கே தெரியாத...

பாமக, அதிமுகவின் இனத் துரோகங்கள்!

பாமக, அதிமுகவின் இனத் துரோகங்கள்!

தமிழர்களுக்காக போராடி சிறை சென்று தியாகத் தழும்புகளை ஏற்ற இரண்டு தலைவர்கள் தமிழ்நாட்டைக் காப்பாற்ற இப்போது களம் இறங்கி இருக்கிறார்கள். அந்த இரண்டு தலைவர்களுக்கும் நீங்கள் வந்துதான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பச்சைக்கொடி காட்டிக் கொண்டு நிற்கின்றன சில அரசியல் கட்சிகள். அந்த இரண்டு தலைவர்கள் யார் தெரியுமா? ஒருவர் அமித்ஷா; மற்றொருவர் ஆடிட்டர் குருமூர்த்தி. உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை மறதி மனநோய்க்காரர் “செலக்ட்டிவ் அம்னீசியா” என்று துணிச்சலாகக் கூறினார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஜெயலலிதாவின் தொண்டர்களை நீங்கள்தான் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா-விடம் மன்றாடி மனு போட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன். ஜெயலலிதாவின் படத்தை அவர் உயிருடன் இருக்கின்ற வரை சட்டையிலும், பேனாவிலும் சொருகிக்கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான். தமிழ்நாட்டில் அமையப்போவது பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அடித்துச் சொல்லி எடப்பாடியை வாய் மூட வைத்து விட்டார் அமித்...

பேரன்பும் பெருங்கோபமும்

பேரன்பும் பெருங்கோபமும்

தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பேரன்பும் பெரும்கோபமும்’ திரைப்படம் ஜாதி பெருசா? சாமி பெருசா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. மிகுந்த ஆழமான கேள்வியும் கூட இது. உண்மையில் சாமியை விட ஜாதிதான் பெரிது. அதைத்தான் இப்படம் பேசுகிறது. இதற்கு படம் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் கரு வழக்கத்தில் இருக்கும் முத்தாலம்மன் கதை. முத்தாலம்மன் தென்மாவட்டம் முழுவதும் வழிபடக்கூடிய தெய்வமாகும். முத்தாலம்மன் உயர்குடி ஜாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்து ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். வெளியூரில் திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வாழும் இடம் தெரிந்து சக்கரையாக பேசி ஊருக்கு அழைத்து வருகிறார்கள். ஊர்க்காரர்களின் பேச்சை நம்பி வந்த முத்தாலம்மன் கணவன் குழந்தைகளோடு சேர்த்து படுகொலை செய்யப்படுகிறாள். இன்னும் அந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட திருவிழாக்களின் போது படுகளம் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் விரதமிருந்து படுகளத்தில் கழுகுமரம் ஏறுவதும், செத்தவர்கள் போல படுத்து கிடக்க, அந்த...

சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை: மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.06.2025 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மறைந்த கழகத் தோழர் இசைக் கலைஞர் அருண் படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தொடர்ச்சியாக கழகம் முன்னெடுத்த பிரச்சார கூட்டங்களையும், இளைஞரணி, நிமிர்வோம் வாசகர் வட்டம், மாணவர் கழக செயல்பாடுகளையும் பட்டியலிட்டு கருத்துரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், அருண் கோமதி, புருஷோத்தமன், தினகரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தேன்மொழி, இரண்யா, பிரசாந்த், சிரிஜன், மகிழவன், நந்தகுமார், ஹர்ஷா ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் கழக வார இதழான ‘புரட்சிப்...

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன?  மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன? மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

மதுரையில் பாஜக ஜூன் 23 அன்று முருகன் அரசியல் மாநாடு ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளது திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அங்கே இந்து முஸ்லிம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கம். அங்கே இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக மாற்ற திமுக ஆட்சி முயற்சிக்கிறது என்றும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் மதவெறியை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன… திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும்...

அய்யா உணவகம் திறப்பு விழா

அய்யா உணவகம் திறப்பு விழா

30-05-2025 அன்று காஞ்சிபுரம் அண்ணா குடியிருப்பு அருகில் திறக்கப்பட்டது. ரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் திவிக) ஒருங்கிணைத்தார். மக்கள் மன்ற‌ ஒருங்கிணைப்பாளர் மகேசு திறந்து வைத்து உரையாற்றினார். இரா.உமாபதி( சென்னை மாவட்டச் செயலாளர்), பிரவீன் குமார் (ஒருங்கிணைப்பாளர் மே17 இயக்கம்), தமிழ் சாக்ரடீஸ் (பெரியார் உணர்வாளர்), அ.வெ முரளி காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தி.க), காஞ்சி அமுதன்(தமிழ் உரிமை கூட்டமைப்பு), மு.சங்கர் (50வது மாமன்ற உறுப்பினர் திமுக), ச.மகேஷ் (திமுக), சானகிராமன் (காஞ்சி மாவட்ட மே17 இயக்கம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அய்யா உணவக உரிமையாளர் சுரேஷ் நன்றி கூறினார். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 2000 வழங்கினார். மேலும் கழக தோழர்கள் சென்னை அருண் (இளைஞரணி), இராவணன் (துணை செயலாளர் தென்சென்னை), கோபி (பகுதி தலைவர் திருவல்லிக்கேணி) மற்றும் காஞ்சிபுரம் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 01062025இதழ்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் பரப்புரை

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் பரப்புரை

மடத்துக்குளம் இரா.மோகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தெருமுனைக்கூட்டங்கள். மறைந்த மடத்துக்குளம் மோகன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 01.06.25 ஞாயிறு காலை 9.15 மணி அளவில் மடத்துக்குளம் நான்கு சாலை சந்திப்பில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மோகன் அவர்களின் குடும்பத்தினர் ஜோதி, அறிவுமதி, திலீபன் பெரியார் பிஞ்சு எழில் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மடத்துக்குளம் மோகன் அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். முன்னதாக மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து புகழ் வணக்க முழக்கங்ளை கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் திரளாக அனைத்து தோழர்களும் பங்கேற்றனர். நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மயிலாடுதுறை மாநாட்டு தீர்மான விளக்க இரண்டாம்...

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

கடந்த 20 ஆண்டுகளாக கழக மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மீது பொய்யாக சரித்திர குற்றவாளி பதிவேட்டை கோபி காவல் துறையினர் பராமரித்து வருகிறார்கள், அதனால் தான் பெரும் அவதிக்கு ஆளாகியிருப்பதாகவும், தன்னுடைய தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தன் மீது கடுமையான குற்றப் பின்னணி எதுவும் கிடையாது, நான் விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற குறுந்தகடு வெளியிட்டதற்காகவும் என் மீது வழக்கு பதியப்பட்டு சுமார் மூன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2009-ஆம் ஆண்டு ஈரோடு மாநகரில் உள்ள ஒரு கோயில் மேல் மேம்பாலம் கட்டக்கூடாது என்று இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து, நானும் கழகத்தினருடன் இணைந்து உண்ணும் விரதம் மேற்கொண்டதற்காக ஈரோடு போலீசாரால் வழக்கு பதியப்பட்டு அதற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2006 ஆம்...

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் 10-5-25 அன்று பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! சமூகநீதியைக் காப்போம்! உழைப்பாளர் நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பெரியார் கைத்தடி பேரணியும்- பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பாக நடைபெற்றது. அரியாங்குப்பத்தில் கலைஞர், சிங்காரவேலர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பெரியார் கைத்தடி பேரணியை பா.செ.சக்திவேல் (தலைமை பொதுக்குழு உறுப்பினர் திமுக புதுச்சேரி)‌, மகேசு காஞ்சி மக்கள் மன்றம் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில்‌ வழிநெடுக கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலைக்கு கழக மயிலாடுதுறை மகேஷ் மாலை அணிவித்தார். அரியாங்குப்பம் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டருக்கு பேரணியாக சென்று பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகங்கள் பொதுமக்கள் மற்றும் தோழர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தொடர் சொற்பொழிவுகளாக இல்லாமல் பேச்சுக்களுக்கு இடையே பாடல்கள், நாடகங்கள் என‌ கலைத்திருவிழா போல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரா. உமாபதி, (திவிக சார்பாக சென்னை...

விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

`கடவுள் வணக்கம்’ கூறுவதைப் போல இனி நாம் எல்லா நிகழ்ச்சிகளும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லித்தான் தொடங்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார் பெரியார். அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கடவுள் மறுப்பு வாசகம் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அத்தகைய வரலாற்றுச்சிறப்பு மிக்க வாசகம் முதன்முதலில் சொல்லப்பட்ட இடம் விடையபுரம்.” 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. அதைப்போல தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை ஒருநாள் உடைக்கப்படும் என்று பதிவிட்டார் ஒருவர். எதிர்ப்புகள், வழக்குகளுக்குப் பிறகு தனது அட்மின் மீது பழியைத் தூக்கிப்போட்டார். அதுபோல, பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசுவார்கள், செருப்பு மாலை அணிவிப்பார்கள். நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுசொல்லி பிணை கேட்பார்கள். மறைந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகும் எதிரிகளை இப்படி பெரியார் அச்சுறுத்துகிறார் என்றால், அவருடைய சித்தாந்தம் ஒரு காரணம். மற்றொன்று, அவரது சிலைக்குக் கீழே பீடத்தில் தவறாமல்...

மேட்டூர் நாத்திக விழா சிந்தனை: “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”

மேட்டூர் நாத்திக விழா சிந்தனை: “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”

பெரியார் முதன்முதலாக விடயபுரம் பயிற்சி வகுப்பில் உருவாக்கிய கடவுள் மறுப்பு வாசகத்திற்க்கு விளக்கம் அளித்து பெரியார் எழுதிய கருத்தாழமிக்க கட்டுரை: கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பினவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று கூறிவருவது கண்டு, பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பதுபோல் துள்ளுகிறார்கள்; துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவிவிடுகிறார்கள். பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கின்றேன். காரணம், போராட்டம் துவக்கினால், எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக்கொள்ளும் சிகாமணிகளே! நான், கடவுளை உண்டாக்கியவன் முட்டான் என்றால், எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? “உண்டாக்கியவன் முட்டாள்” என்றால், உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கின்றவனே! நீ, கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது...

வினாடி வினா

வினாடி வினா

தமிழ்நாடு இரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய ஆட்சி அனுப்பிய நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பி விட்டது. -செய்தி ஆமாம்.தெற்கு ரயில்வே வடக்கு இரயில்வேவாக மாறிவிட்டது.  “ஆச்சாரியா பஞ்சகச்சம்” வேட்டியை வெளியிட்டு ராமராஜ்ய மரபுகளுக்கு பெருமை சேர்த்துள்ளோம். -ராம்ராஜ் காட்டன் ராம்ராஜ் காட்டன் ஜட்டிகளைத் தயாரித்து ராமனுக்கு பெருமை சேர்த்ததையும் சேர்த்து சொல்லுங்க‌.  கீழடி அகழ்வாய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத்துக்கு திருத்தி எழுத திருப்பி அனுப்பியுள்ளது. -ஒன்றிய ஆட்சி ஆர்எஸ்எஸ் ஆபிஸ்க்கு மெயில் போடுங்க. அமர்நாத் வேலையை அவங்க பார்த்துப்பாங்க.  எங்க கூடத்தான் பாமக இருக்கு -பாஜக தலைவர் நயினார் சரி; பாமக யாரு கூட இருக்கு நயினார் ஜீ.  குற்றவாளி ஞானசேகரன் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை விசாரிக்க வேண்டும். -அண்ணாமலை இது நீதிமன்ற விசாரணை ஜீ, அமலாக்கத்துறை விசாரணை அல்ல. பெரியார் முழக்கம் 01062025இதழ்.

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு வழக்கில் இருந்து கழகத் தோழர்கள் விடுதலை : பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில் திருச்செங்கோடு பெரியார் சிலை அருகில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அதிமுக காவல்துறை, போராடிய கழகத் தோழர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி திறம்பட வாதாடி வழக்கை ரத்து செய்தார். வழக்கில் விடுதலை பெற்றவர்கள் : மு.சாமிநாதன், வைரவேல், தண்டபாணி, சதீசுகுமார், பூபதி, மணி, பிரகாஷ், சுப்பு என்கிற ராஜசேகர், கோபி, தியாகு, மனோஜ், கவுதம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

நாமக்கல் மாவட்ட கழகம்‌  “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்ட கழகம்‌ “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் அ முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை, குமாரபாளையம் நகரத் தலைவர் எம் டி தண்டபாணி ஆகியோர் முயற்சியில் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பிறவியின் அடிப்படையில் இலவசமாகக் கிடைத்தது ஜாதி. இந்த ஜாதியால் பயன் அடைந்தவர்கள் அதைக் கொண்டாடினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள். ஜாதி சமூகத்தை வளர்க்கவில்லை; மாறாக சமூகத்தைப் பிளவுபடுத்தியது; சமூக ஒற்றுமையையும் அது கட்டிக் காக்கவில்லை. இன்றைக்கு அரசியலில், அதிகாரத்திலும், சமூக உறவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. “பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று நடக்கும் அதிகார சண்டை என்பது ஜாதி அரசியலில் மோசமான தோல்வி!” சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஒரு காலத்தில் முற்போக்கு பாதையில் பயணித்தது உண்மை; பிறகு 35 வயதில் தனது மகனை இராமதாஸ்அமைச்சராக்கிய பிறகு அது திசை மாறியது. மருத்துவர் ராமதாஸ் அது நான் செய்த பெரும் தவறு என்று இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். சமூக நீதி அரசியலை சமூகத்திற்காகப் பயன்படுத்தாமல் பதவிகளுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு கூட்டணிகளை மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டு சுயநலப் பாதையில் அதிகாரத்திற்காக பயணித்தவர்கள், அந்த...

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

01.06.2025 தமிழ்நாடு மாணவர் கழகம் முன்னெடுத்த புதிய தோழர்களுக்கான “இட ஒதுக்கீடு – அ முதல் ஃ” என்ற தலைப்பில் அறிமுக வகுப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியரசு தலைமை தாங்கினார், தோழி அனைவரையும் வரவேற்றார், தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் இளவரசன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர் இட ஒதுக்கீடு பற்றி சிறப்பாக அறிமுக வகுப்பெடுத்தார். வகுப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற தோழர் லாவண்யா அவர்களுக்கு தோழர் அன்பு தனசேகர் பரிசுத்தொகை ரூ.1000/- வழங்கினார். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன் உட்பட 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். தோழர்களுக்கு மதிய உணவை தி.வி.க மாவட்டச் செயலாளர் உமாபதி வழங்கினார். நிறைவாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்...

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

ழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கூறியதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். பெரியார் கருத்து இதுவாகவே இருந்து இருக்கிறது. அவரது எழுத்தில் இருந்து சிலபகுதிகள்; மொழிவாரி மாகாணம் பிரிக்கப் படப்போகிறது. மொழி வாரி வித்துவான்கள் நியமிக்கப்பட்டு மொழி வாரி இலக்கணங்களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம் தீட்டியாகி விட்டதே!…. பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு...

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரங்களை தூண்டும் விதமாக பேசி வரும் மதுரை ஆதினத்தை கண்டித்து 16-5-2025 அன்று காலை 10:30 அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மதுரையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன நிகழ்வில் பால் பிரபாகான் (கழக பரப்புரைச் செயலாளர்) கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி (திவிக) தலைமையில் நிகழ்வு தொடங்கி, கனியமுதன்(விசிக), மீ.த பாண்டியன்(மதநல்லிணக்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்), பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க), பேரறிவாளன் (பொதுச் செயலாளர் – தமிழ்ப் புலிகள்), கபீர் நகர் கார்த்திக் (ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர்), வரதராஜன் (பெரியார் நெறியாளர்), தமிழ்ப்பித்தன் (த.பெ.தி.க), ராமலிங்கம் (ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர்), அப்பாஸ் (மனிதநேய மக்கள் கட்சி), குமரன் (பு .இ.மு) ஆகியோர் கலந்து கொண்டு ஆதீனத்தைக் கண்டித்தும், அவரை கைது செய்யவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோழமை இயக்கங்களுடன் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக்...