Author: News DVK

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஜாதி ஆதிக்க மனநிலையில் இருந்து அம்மன நிலையில் உள்ளோர் வெளியில் வரவேண்டும் என கோரிக்கை! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27) கவினை 27.7.25 அன்று பாளையங்கோட்டையில் சுஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்கிறார். கவின் பட்டியல் சமூகத்தையும் சுஜித் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சார்ந்தவர்கள். சுஜித்தின் சகோதரியை கவின் காதலித்த காரணத்தினால் கவினை சுஜித் ஜாதி ஆணவப் படுகொலை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. ஜாதி ஆணவப் படுகொலை செய்த சுஜித் தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. கவின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு அவர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.இந்நிலையில்...

`இந்தியா டுடே’ ஆய்வறிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

`இந்தியா டுடே’ ஆய்வறிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத் திறன் மேன்மையை ஐ.நா. அமைப்பும், ஒன்றிய அரசின் நிறுவனங்களும் பாராட்டியுள்ளன. தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் 7ம் நாள் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான, புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக் குறுகிய காலத்தில் பல வெற்றிகளை பெற்று சாதனைகள் புரிந்து தேசிய அளவில் முதல் இடம் என்னும் பெருமையை நிலைநாட்டியுள்ளது. ‘இந்தியா டூடே ஆங்கில இதழ்’ ஒன்றின் இயக்குநர் கூறுகையில், “இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளை கணித்ததாகவும், அதில் ஒட்டு மொத்த செயல் திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர், “இந்த கடிதத்தைப் படித்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; இது தனிப்பட்ட எனக்கு கிடைத்த பெருமை அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெருமையாகும். தமிழ்நாட்டிற்கு...

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து...

மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!

மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். மேலமெஞ்ஞானபுரம் என்ற ஊரின் வரலாறு இது.. 1967, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு. தமிழ்நாட்டு இளைஞர்களைத் தன்னகத்தே வாரி அணைத்து வைத்திருந்த தி.மு.கழகத்தின் சூழலுக்குத் தப்பாமல், தங்களையும் இணைத்திருந்த உடன்பிறப்புகள் சீ.தங்கத்துரை, சீ.டேவிட் செல்லத்துரை. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மேலமெஞ்ஞானபுரம் இவர்களின் சொந்த ஊர். மாணவப் பருவத்திலேயே மதத்தைக் கடந்து, பகுத்தறிவுக் கொள்கைகளின் மீது நாட்டம் கொண்டிருந்தனர். தி.மு.க. கூட்டங்களில் பங்கேற்பதும், தேர்தல் பிரச்சார நாடகங்களில் நடிப்பதும், சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வதும் இவர்களின் பணி. கழகம் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், சட்டமன்ற உறுப்பினர் ஆலடி அருணா அவர்களின் பரிந்துரையால் தங்கத்துரைக்கு மின்சார வாரியத்தில் வேலை. தி.மு.க. உருவாகி அப்போது 20 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெரியாரின்...

செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8)     – விடுதலை இராசேந்திரன்

செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8) – விடுதலை இராசேந்திரன்

‘இது இறைவன் கொடுத்த உடல்’ என்ற நம்பிக்கையை பொது சமூகம் ஒரளவு புறக்கணித்து விட்டது என்றே கூறலாம். குழந்தை பிறப்புக்கு இறைவனே காரணம் என்ற கூற்று வாழ்வியலில் முறியடிக்கப்பட்டு விட்டது. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை அரசாங்கங்கள் செயல்படுத்தி வருகின்றன. அதில் வெற்றியும் பெற்று விட்டன. கருத்தடைச் சாதனங்களை கடவுள் நம்பிக்கையாளர்களே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். குழந்தை இல்லாதவர்கள் பரிகார பூஜைகளை மட்டுமே நடத்தி வந்தனர். இப்போது கருத்தரிப்பு மருத்துவ மய்யங்கள் ஊருக்கு ஊர் வந்துவிட்டன. சினை முட்டை, விந்துக்களை இணைத்து அறிவியல் முறையில் கருவை உருவாக்குகிறார்கள். கருவை சுமக்க வாடகை பெண்களும் வந்து விட்டனர். கருத்தடைத் திட்டத்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். ‘கர்ப ஆட்சி’ என்ற நூலையும் அவரே வெளியிட்டார். குடும்ப வருமானம், சிக்கன வாழ்க்கை என்று குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பொருளியல் பார்வையில் பலரும் அணுகினார்கள். ஆனால் பெரியார் பார்வை இதில் மாறுபட்டது. பெண்ணடிமைக்கு முக்கிய...

பார்ப்பன மெகா ஊழல்

பார்ப்பன மெகா ஊழல்

சந்தா கோச்சார் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. சந்தா கோச்சார் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார். வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச் சார் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச் சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக் கோச்சாரின் என்ஆர்பிஎல் நிறுவனத்துக்கு மடைமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ரூ.300 கோடி கடன் வழங்க அனுமதி அளித் ததற்காக சந்தா கோச்சாருக்கு அவரது கணவர் மூலம் லஞ்சப் பணத்தை வீடியோகான் குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பிஎம்எல்ஏ சட்ட பிரிவு 50-ன்...

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள்           கனிமொழி எம்பி கேள்வி

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள் கனிமொழி எம்பி கேள்வி

ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் நில­வும் தீண்­டாமை உள்­ளிட்ட பாகு­பா­டு­கள் குறித்து தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், திமுக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி நேற்று (21-–07–2025) எழுத்­துப் பூர்­வ­மான கேள்­வி­களை எழுப்­பி­னார். “உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், யு.ஜி.சி. விதி­மு­றை­கள் 2012 இன் படி ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் Equal Opportunity Cells எனப்­ப­டும் சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளதா? அப்­ப­டி­யா­னால், அதன் விவ­ரங்­கள் மற்­றும் அத்­த­கைய பிரி­வு­களை உரு­வாக்­கிய மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரங்­கள் என்ன? இல்­லை­யென்­றால், சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­ப­டா­த­தற்­கான கார­ணங்­கள் என்ன? ஒன்­றிய அர­சின் கல்­லூ­ரி-­­பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளில் சாதி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாடு காட்­டப் பட்ட சம்­ப­வங்­கள் குறித்த தர­வு­களை அர­சாங்­கம் பரா­ம­ரிக்­கி­றதா? அப்­ப­டி­யா­னால், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளி­லும் நடப்பு ஆண்­டி­லும் ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் நடந்த இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் விவ­ரங்­கள், கல்­லூரி வாரி­யாக/பல்­க­லைக்­க­ழக வாரி­யாக...

ஆர்.எஸ்.எஸ் கல்வி மாநாடு நடத்துவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் கல்வி மாநாடு நடத்துவது ஏன்?

கேரள மாநிலம் காலடியில் நான்கு நாள் கல்வி மாநாடு ஜூலை 25 முதல் 28 வரை நிகழப்போகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், ஒன்றிய ஆட்சியின் உயர்கல்வி நிறுவனத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், இவர்களோடு ஆன்மீகம் பேசும் மதத் தலைவர்கள் இதில் பங்கேற்கப் போகிறார்கள். மாநாட்டைக் கூட்டி இருப்பது ஒன்றிய ஆட்சியா? கல்வியாளர்களா? கேரள மாநில அரசா? இல்லை. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூட்டி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக செயல்படுத்துதல், பாரம்பரிய கல்வி முறையை முன்னெடுத்தல் என்பது பற்றி இவர்கள் ஆராயப் போகிறார்களாம். ஒன்றிய கல்வி அமைச்சகம் இந்த பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஒப்படைத்து விட்டது போலும். நாட்டை ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றுவதற்கு அடிப்படையாக கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்ற உறுதியான முடிவோடு முயற்சிகள் நடக்கின்றன. காந்தி கொலையில் தொடர்புடைய அமைப்பு, கலவரங்களை உருவாக்கிய அமைப்பு என்று பல விசாரணை ஆணையங்கள் உறுதிப்படுத்தி உள்ளன....

சமரசமற்ற கடவுள் மறுப்பாளர்  வேலுபிரபாகரன் முடிவெய்தினார்

சமரசமற்ற கடவுள் மறுப்பாளர் வேலுபிரபாகரன் முடிவெய்தினார்

“,சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் – நடிகர் – ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம். 1980-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வேலு பிரபாகரன்,பின்னர் இயக்குநராகவும் உருவெடுத்தவர்.இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ போன்ற திரைப்படங்களில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு – பெண்ணுரிமைக் கருத்துக்களையும், கடவுள் மறுப்பு – பகுத்தறிவுக் கொள்கைகளையும் அழுத்தமாகப் பேசி, பொதுமக்களாலும் அத்திரைபடங்களை நேசிக்கச் செய்தவர். தன்னை நாத்திகவாதி என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு, தமிழ்த் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தைத் தனக்கென கொண்டிருந்தது மட்டுமல்லாமல், திரைப்பட படப்பிடிப்புத் தளங்களில் கூட மூட நம்பிக்கை ஒழிப்புக் கருத்துக்களைப் பேசி,தன்னுடன் பணியாற்றும் திரைத்துறை நண்பர்களையும் பகுத்தறிவாளராக்கிய பெருமைக்குரியவர் வேலு பிரபாகரன். திரைத்துறையில் நடிகர் சத்யராஜ் போன்ற பலர் நாத்திகராகவும், பகுத்தறிவாளராகவும் அடிப்படைக் காரணியாய் இருந்தவர் வேலு பிரபாகரன். நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் மஞ்சுநாதா என்ற கோயில் பாஜக எம்.பி வீரேந்திர ஹெக்டே கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான‌ நிலத்தில் 100க்கும்‌ மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும், உடல்களைப் புதைத்ததாகவும், மஞ்சுநாதா கோயிலின் முன்னாள் ஊழியர் பீமா கடந்த ஜீலை 4-ம் தேதி புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தென் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் பத்தாண்டுகளாக பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் நடந்து வருவதாக தற்போது ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: 1995ம் ஆண்டு முதல் 2014 வரை, மஞ்சுநாதா கோவிலில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தேன். இந்த காலகட்டத்தில் கோயிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்று‌ விடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். குற்ற...

மானுடத்தை வாழவிடுங்கள்

மானுடத்தை வாழவிடுங்கள்

நாடார்கள், கவுண்டர்கள், முதலியார், வன்னியர்கள் என்று ஜாதிக்கொரு திருமண சேவை மையங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் இதற்கான விளம்பரங்கள் வரிசை கட்டி வருகின்றன. மக்களுக்கான சேவை மையங்கள் இப்போது மறைந்து விட்டன. ஜாதி கடந்த திருமணங்கள் என்றாலே அதை குற்றமாகப் பார்க்கிறது சமூகம். இதே ஜாதி நம்பிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டால் ஜாதி பார்க்க மாட்டார்கள். எந்த வகை இரத்தம் என்று தான் பார்ப்பார்கள். அது தனது ஜாதிக்காரர்கள் வகை இரத்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று பொங்கி எழ மாட்டார்கள். “எந்த ஜாதியாக இருந்தால் என்ன நல்ல மனசு இருக்கிறதே” என்று மாலை போட்டு பாராட்டுவார்கள். தன் வீட்டுப் பெண்ணுக்கு திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டு இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும்போது மட்டும், ஜாதி தடையில்லை. பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்று ஜாதி மறுப்புக்கு வந்து விடுவார்கள். இந்தியாவில் ஜாதி அடையாளம் இப்படி தடுமாறுகிறது. இப்போது ‘குடிமகன்’...

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் மோடி அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 7.7.2025 அன்று மதுரையில் திருவள்ளுவர் சிலை அருகில் கிழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமாட்சி பாண்டி தலைமையில், சத்தியமூர்த்தி முன்னிலையில், வாசுகி அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். சிறப்புரையாக கழகத்தின் மாவட்ட காப்பாளர் தளபதி தொடக்க உரையாற்றினார். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை இடம் மாறுதலுக்கு உட்படுத்திய ஒன்றிய மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணனை தமிழக தொல்லியல் துறை தலைவராக தேர்ந்தெடுத்து ஆய்வினை சிறப்புடன் நடத்த வழி செய்யவும், தமிழ்நாடு அரசை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர் நாகரிகத்தை ‘பாரதீய’ நாகரிகம் என்று குழப்பும் சங்கி அடிமை மா.பா பாண்டியராஜனையும் – பாரதிய ஜனதா சங்கிகளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தோழமை அமைப்பு தோழர்கள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தனர். பசும்பொன் பாண்டியன் (அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்...

திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

மாநகர ஆலோசனைக் கூட்டம் 09-07-2025 மாலை 5 மணி அளவில் ஆத்துப்பாளையம் மதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தலைமை: மதன் முன்னிலை, முத்து. தீர்மானங்கள்:  விநாயகர் சதூர்த்தி என்ற பெயரில் நீர் நிலைகளில் இரசாயன பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கரைப்பதை தடுத்து தலைமைக் கழக வழி காட்டுதலின் படி மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், அறநிலையத் துறை, காவல் ஆணையாளர் அலுவலம் ஆகிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி நேரில் மற்றும், பதிவு தபால் மூலம் புகார் விண்ணப்பம் வழங்குவது.  கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடத்துவது.  பெரியார் முழக்க வளர்ச்சி நிதி வழங்குதல் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா பொது கூட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் நடத்துவது மற்றும் தோழர் மலரவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரை...

சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்

சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்

“இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” என்ற தலைப்பில் சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டம் 05.07.2025 அன்று பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகில் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகரத் தலைவர் பாலு தலைமை வகித்தார். சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர தலைவர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகர பொருளாளர் பிரபு மற்றும் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக நந்தகுமார் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு மற்றும் தேநீர் தோழர் நந்தகுமார் அவர்கள் வழங்கினார். தோழர்கள் அருண்பாண்டியன், பாலு ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். சங்கிகளின் மிரட்டல் கூட்டம் தொடங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பாகவே 30க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தோழர்கள் காவல்துறை அதிகாரிகளிடம்...

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை கலந்துரையாடல் கூட்டம் 13.07.25 ஞாயிறு அன்று மாலை 06.30 மணியளவில் சென்னை அயனாவரத்தில் உள்ள சேத்துப்பட்டு இராஜேந்திரன் இல்லத்தில் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் புதிய தோழர்களை சேர்ப்பது வட சென்னையில் கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் தெருமுனை, பரப்புரை கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வடசென்னை மாவட்டம் சார்பில் 100 உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தோழர்கள் ராஜன், தினகரன், சிகாமணி, கழகப் பணிகளை முன்னெடுப்பதை குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத்‌ தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தமிழ்நாடு...

பண்ணையார்களை பணியவைத்த கொரடாச்சேரி

பண்ணையார்களை பணியவைத்த கொரடாச்சேரி

முரசொலியில் பெரியார் மண் தொடரில் ர.பிரகாசு எழுதி வரும் கட்டுரை தொடரில் நாகை மாவட்டம் கொரடாச்சேரி என்ற ஊரின் வரலாறு இது. எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி’ என்பதுபோல, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ‘எல்லா சாலைகளும் பெரியாரை நோக்கி’த்தான். இங்குள்ள கண்கொடுத்தவனிதம் கிராமம், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான இணைப்புச் சங்கிலி. அந்த ஊரில், எந்தத் திசையில் சென்றாலும், தந்தை பெரியார் சிலையாக இருப்பார். மொத்தம் 7 சிலைகள் உள்ளன. கருப்புச்சட்டை சகிதமாய் எவரேனும் இன்றும் தென்படுவர். அங்கு அந்தக் கருப்புச் சட்டைகள் உருவான காலகட்டம் 1950. நேரடியாகப் பெரியாரின் பேச்சைக் கேட்டோ, எழுத்தைப் படித்தோ கருப்புச்சட்டை அணிந்தவர்கள் அல்ல அவர்கள். ஆனால், தாங்கள் சந்தித்த அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகக் கருப்புச்சட்டையைக் கருதினர். அந்த ஆயுதத்தை அவர்கள் ஏந்த பாலமாக இருந்தது திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம். கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள கண்கொடுத்தவனிதம், பருத்தியூர், விடையபுரம், வடபாதி, தென்பாதி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இருபதுக்கும்...

பனகல் அரசரும் திராவிட மாடலும்

பனகல் அரசரும் திராவிட மாடலும்

நீதிக் கட்சியின் தலைவர்; இரண்டு முறை சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! (09.07.1866) மகத்தான சாதனைகளை புரிந்தவர். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கும் பனகல் அரசரின் ஆட்சிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அரசு பதிவேடுகளில் `பறையர் பஞ்சமர்’ என்ற இழிசொற்களை நீக்கி ஆதிதிராவிடர் என்று அறிவிக்க ஆணையிட்டவர் பனகல்அரசர். திராவிட மாடல் ஆட்சி ஆதி திராவிட நல விடுதிகளை `சமூக நீதி’ விடுதிகளாக பெயர் மாற்றம் செய்துள்ளது. அவமானச் சொல்லான `காலனி’ என்ற சொல்லை அரசு பதிவேடுகளில் இருந்து நீக்கி இருக்கிறது. மாநிலங்களின் உரிமைக்காக திராவிட மாடல் ஆட்சி குரல் கொடுப்பதைப் போல் பனகல் அரசரும் போராடினார். பிரிட்டிஷ் அரசிடம் இருந்த மருத்துவத் துறையை கடுமையாக எதிர்த்துப் போராடி, மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில உரிமைக்கு கொண்டு வந்தவர் பனகல் அரசர். முதல் இந்திய மருத்துவக்‌ கல்லூரியை அவர்தான் நிறுவினார். இன்று மும்மொழி வழியாக...

மூளையின் உற்பத்தியே கடவுள் உணர்ச்சி     கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(7) -விடுதலை இராசேந்திரன்

மூளையின் உற்பத்தியே கடவுள் உணர்ச்சி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(7) -விடுதலை இராசேந்திரன்

விபத்துகளும் மரணங்களும் கடவுள் விதிப்படிதான் நிகழ்கின்றன என்று மதவாதிகள் கூறுகிறார்கள். அஹமதாபாத் விமான விபத்தில் 241 பேர் இறந்தார்கள். விபத்துக்களை எவராலும் தடுக்க முடியாது; எல்லாம் விதிவசம் என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால் மக்கள் அமித் ஷாவின் இந்த கருத்தை நம்புவதற்குத் தயாராக இல்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியை உடைத்து பார்த்தால் அங்கே “விதியோ கடவுளோ இல்லை”. விமான விபத்துக்குக் காரணம் எரிபொருள் நிறுத்தப்பட்டது தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எரிபொருளை நிறுத்தியது யார் என்ற அழுத்தமான சந்தேகமே இப்போது எழுந்துள்ளது. கடவுள் தான் காரணம் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? நிச்சயம் நம்பமாட்டார்கள், இங்கே கடவுள் மறுப்பு வந்து விடுகிறது. கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட மன்னர்கள் ஆட்சி இப்போது இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்துவிட்ட பிறகு கடவுள் ஓரங்கட்டப்பட்டு விட்டார். “நீங்கள் என்ன சொன்னாலும் கோயிலுக்குப் போனால் ஒரு ஃபீலிங் வருது பாருங்க.. அதுதான்...

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

சென்னை மாவட்டக் கழகத் தோழர் கன்னியப்பன் உடல்நலக் குறைவால் கடந்த 12.07.2025 அன்று முடிவெய்தினார். அவரின் உடலுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தட்சிணாமூர்த்தி, ஏசுகுமார், மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 28வது கூட்டம் தோழர் சிரிஜன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த கழகத் தோழர் கன்னியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அரசியலாக்கப்படுகிறதா நீதித்துறை? என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். ‘அம்பேத்கரின் முகவுரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ரகசிய வரலாறு’ என்ற நூலை எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார். பேராசிரியர் சுப்பிரமணியின் ‘இதழியல் களத்தில் பெரியார்- ஆய்வும் தொகுப்பும்’ நூலை ர.பிரகாசு திறனாய்வு செய்தார். நிகழ்வில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

பெரியார் முழக்க வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்

பெரியார் முழக்க வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்

புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி குறித்து இணைய வழியில் 4.07.2025 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் முழக்க தற்போதைய நிதிநிலை பற்றியும், இனிவரும் காலங்களில் சந்தா சேர்ப்பதை வேகப்படுத்துவது பற்றியும், பெரியார் முழக்க வளர்ச்சி நிதி பற்றியும், ஏற்கெனவே 7000 அரசு நூலகங்களில் நமது இதழ் வாங்கிக்கொள்ளலாம் என்ற அரசாணையை நடைமுறைபடுத்துவது பற்றியும் தோழர்கள் தங்களின் கருத்தை முன்வைத்தனர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். கழக தலைமைக் குழு உறுப்பினர்கள், கழக மாவட்ட பொருப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

1.கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கும்‌ திட்டத்துக்கு ஆதரவு கூடுகிறது!

1.கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கும்‌ திட்டத்துக்கு ஆதரவு கூடுகிறது!

புரட்சிப் பெரியார் முழக்க வளர்சிக்காக நன்கொடையாளர்களை வாட்ஸ்அப் வழியாக திரட்டி மாதம் தோறும் நன்கொடை வழங்கும் சிறப்பான செயல் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் திருப்பூர் ஆசிரியர் சிவகாமி அவர்களும் ஈரோடு ஆசிரியர் சிவகுமார் அவர்களும் தொடங்கியுள்ளனர். 100 தோழர்களை இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ரூ. 8000 நன்கொடையாக தரப்பட்டது. ஜூலை மாதத்திற்கு ரூ. 16,000 நன்கொடையாக வழங்கியுள்ளனர் நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பெரியார் முழக்கம் 17072025இதழ்

காவிமயமாகிறதா நீதித்துறை?

காவிமயமாகிறதா நீதித்துறை?

நீதிமன்றங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை தகர்ப்பதற்கும் தங்களின் சொந்த கருத்துகளை பரப்புவதற்குமான மேடைகளாகவும் மாறி வருகின்றன. நீதிமன்றம் என்பது `பார்ப்பன மன்றமாகவே’ இருக்கிறது என்று வெளிப்படையாகவே பெரியார் அறிவித்தார். தன்மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே “பார்ப்பனர்கள் நீதிபதியாக வாழும் நாடு கடும்புலி வாழும் காடு” என்று நீதிபதிகள் முன் அறிக்கை சமர்ப்பித்தார். சமூக நீதியின் தாய் வீடு என்று சொல்லப்படும் தமிழ்நாட்டிலேயே நீதிமன்றம் நவீன சனாதனத்தையும், வர்ணாஸ்ரமத்தையும் பேசிக் கொண்டு இருக்கிறது. இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும். சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய `பிராமணர்’ சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு புரளும் சடங்கை பாரம்பரிய மதச் சடங்கு என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். உச்சநீதிமன்றத்தாலும் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வினாலும் தடை செய்யப்பட்ட இந்த சடங்கை சட்டத்தை மீறி நீதிபதி ஜீஆர் சுவாமிநாதன் அனுமதித்தார். கோயில்களை அறநிலையத்துறையிடமிருந்து மீட்க வேண்டும் என்ற பாஜகவின்...

பெரியார் பல்கலைகழகத்தில் ஜாதியப் பாகுபாடு

பெரியார் பல்கலைகழகத்தில் ஜாதியப் பாகுபாடு

சேலம் பெரியார் பல்கலையில் ஜாதியப் பாகுபாடு, வன்கொடுமை நிலை தமிழக அரசு தலையிட்டு தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின முனைவர் பட்ட மாணவர்கள் முனைவர் பட்டத்தை முடிக்க முடியாமல் தமிழ் துறைப் பேராசிரியர் பெரியசாமி இடையூறு செய்து வருவதால் பல பட்டியலின முனைவர் பட்ட மாணவ மாணவிகள் வெளிப்படையாகப் புகார் அளித்துள்ளது மிகவும் வேதனையான ஒன்றாகும். படிக்கும் மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வது, வீட்டிற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூறுவது, மளிகை பொருட்களை வாங்க சொல்வது போன்ற கொடுமைகள் பெரியார் பல்கலையில் நடப்பது வேதனையான ஒன்று. இனியும் இதை அனுமதிக்க முடியாது.பட்டியலின, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளை வேலைக்காரர்களாக எஜமான மனப்பான்மையோடு நடத்துவது கண்டனத்திற்கு உரியது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள்...

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

உ.பியில் 5000 பள்ளிகள் மூடல்

உ.பியில் 5000 பள்ளிகள் மூடல்

உத்தரப் பிரதேச அரசு, குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்தால், அவற்றை மூட உள்ளது. பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆறுகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கிட்டால், அந்தப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பையே மாற்றும் இந்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க உள்ளது. இந்த உத்தரவின் மூலம், 3 லட்சம் குழந்தைகள் வேறுபள்ளிகளுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட உள்ளன. இந்த நடவடிக்கை சுமார் 27 ஆயிரம் அரசுப் பள்ளிகளை பாதிக்கும். 35 ஆயிரம் உதவி ஆசிரியர்கள் மற்றும் 27 ஆயிரம் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடக் குழப்பங்களை உருவாக்க உள்ளது. இந்த...

திராவிட மாடலும் மோடி மாடலும்!

திராவிட மாடலும் மோடி மாடலும்!

இதுவரை மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு அரசு நிர்வாகத்திடம் மனு போட்டுக் கொண்டிருந்தார்கள். அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு மேசையையும் கடந்து ஒப்புதலைப் பெற்று மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று தெரியாத நிலை தான் நீடித்து வந்தது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதில் மகத்தான புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.அரசு நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு செல்வது தான் அவர் நிகழ்த்திவரும் நிர்வாகப் புரட்சி.’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மட்டுமல்ல; ஏற்கனவே மக்களுடன் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு நேரிடையாக கொண்டு சேர்க்கப்படுகின்றன. முதலமைச்சர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பல்லாயிரக்கணக்கில் மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி அவர்களின் மனுக்களை பெற்று வருகிறார். கோப்புகளோடு மட்டும் செயல்பட்ட நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு வந்து இணைத்துள்ள ]இந்த நடைமுறை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தனித்துவமான சிறப்பு இன்று (16.05.2025) ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கையில் வந்திருக்கிற செய்தியை சுட்டிக்காட்டவிரும்புகிறோம். ஒன்றிய அமைச்சரவை...

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வருமான வரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி 36 வருட பணிக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பாராட்டு விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். அன்பு தனசேகர் மகள் வழக்கறிஞர் இளவேனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். உரையாற்றியவர்கள் அன்பு தனசேகரின் சமூகத் தொண்டுகளை சமூக தொண்டாற்றுவதில் அவரின் ஆர்வத்தையும் பாராட்டினர். தனது பெண் மக்களை முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். அலுவலகத்தில் ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதிகாரியாக இருந்தும் ஒரு அதிகாரியாக நடந்து கொள்ளாமல் எளிமையான மனிதராக எல்லோரிடமும் பழகியவர். தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவியவர். அமைப்புகளை உருவாக்கி வழி நடத்தியவர். பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர். பல ஊர்களுக்கு சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். நடைபயிற்சி...

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் வெள்ளார் பகுதியில் 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தோழர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினார்கள். தீர்மானங்கள்: 1). ஜூலை மாத இறுதிக்குள் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மேச்சேரியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும், 2). கிராமப்புற பகுதிகளில் மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது, 3). மாதம் ஒரு பகுதியில் கிளைக் கழக சந்திப்பு நடத்தி புதிய இளைஞர்களை திரட்டுவது. 4). புதிய இளைஞர்களுக்கு வருடம் ஒரு பயிலரங்கம் இளைஞர் அணி சார்பாக நடத்துவது,...

உடற் கொடை அளிப்பு!

உடற் கொடை அளிப்பு!

திருப்பூர் தி.வி.க தோழர் மலரவன் என்கிற மலர் மணி நாதன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28.06.2025 இரவு 8. 30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் சோளிபாளையம் பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு அவரது விருப்பத்தின் பேரில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக் கிழமை 29.6.2025 காலை 12.30 மணிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது. தோழர் மலரவனின் உடலுக்கு எந்தவிதமான ஜாதி மத சடங்குகளும் செய்யப்படவில்லை. மலர் மாலை கூட அணிவிக்கப்படாமல் பெண் தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உடலை சுமந்து வந்தனர். தோழரின் இணையர் பாண்டிச்செல்வி, மகள் மதுலதா, மகன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கொடையாக வழங்கப்பட்டது. மலரவன் அவர்கள் 41 ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கையை கடைபிடித்தவர். தனது குடும்ப உறுப்பினர்களை பெரியார் வழியில் நடத்தியவர் ஆவார். நிகழ்வில் சு.துரைசாமி பொருளாளர், வீ.சிவகாமி தலைவர் தமிழ்நாடு...

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

வரலாற்று பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த சமூக புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். இது பூந்தோட்டத்தில் நடந்த புரட்சி! “எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். ‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார். தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம்....

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

உயிர்கள் எப்படி தோன்றின? இந்த கேள்விக்கான பதில்கள் காலத்துக்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த கேள்வி எப்போது உருவானது? மனித மூளை உருவான பிறகுதான். கடவுளை, மதத்தை, ஜாதியை உருவாக்கியது மனித மூளை தான். ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டு இருப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. நானே கடவுள்; பக்தர்களைக் காக்கவும் வர்ண தர்மத்தை நிலைநாட்டவும் நான் வந்திருக்கிறேன். தர்மம் மீறப்படும்போது நான் அவதாரம் எடுத்து வருவேன். அது சாம்ப வாமி யுகே, யுகே என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடவுளே மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்தார் என்றும் கீதை கூறுகிறது. இந்த மனிதர்களை வர்ண பாகுபாடுடன் உயிரையும் உடலையும் தந்து பூமிக்கு அனுப் பியவர்கள் கடவுள்கள் தான் என்ற நம்பிக்கை மக்கள் மீது திணிக்கப்பட்டது. உண்மையில் கடவுள் எந்த மனிதரையும் படைக்கவில்லை. அது...

சிந்தனையை தூண்டும் நூல்!

சிந்தனையை தூண்டும் நூல்!

நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்க வேண்டாம் என்ற தலைப்பில் அறிவுச் சுடர் வெளியீட்டகம் நூல் ஒன்று வெளியிட்டுள்ளது. நூலின் நோக்கம் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்கவேண்டாம் என்று தலைப்பிட்டதன் காரணம் இந்தப் புத்தகத்தின் கேள்விகள் அனைத்தும் உங்களைப் பொருத்த வரையில் பொருத்தமற்றதே. ஆனாலும் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டீர்களானால் ஒரு கடவுள் நம்பிக்கையாளரிடம் எவ்வாறு விவாதிப்பது அல்லது சிந்தனையைத் தூண்டுவது என்பதற்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும். அதுபோல மறு வெளியீடுகளில் இதனை மேம்படுத்த நீங்களும் உதவலாம். நூல் விலை: ரூ.50 கிடைக்கும் இடம்: அறிவுச் சுடர் வெளியீட்டகம், திருச்சி பெரியார் முழக்கம் 10072025இதழ்

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

20.06.2025 அன்று கழகத் தலைவரின் 78 வது பிறந்தநாளில் சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் தலைவரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக மகளிர் அணி சார்பில் ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி மற்றும் தோழர்கள் கலைச்செல்வி, காயத்ரி, கோமதி, கீதா, தேன்மொழி, இராணி, அருள்மொழி, மகிழினி ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 10072025இதழ்

சுயஜாதிப் பற்று ஜாதி எதிர்ப்பு அல்ல!

சுயஜாதிப் பற்று ஜாதி எதிர்ப்பு அல்ல!

திரிபுவனம் காவல் நிலையத்தில் நடந்த சித்திரவதை படுகொலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. காவல்துறையின் அடக்குமுறை கலாச்சாரம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. அதே நேரத்தில் இப்படி ஒரு படுகொலை நடந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன் தமிழ்நாடு முதல்வர் அவசரமாக அதிகாரிகளைக் கூட்டி ஆலோசித்து குற்றத்தில் தொடர்புடைய ஐந்து காவல்துறையினர் மீது சஸ்பெண்ட் என்ற பெயரளவிலான நடவடிக்கையை எடுக்காமல், கொலைக் குற்றத்தின் கீழ்கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறை அதிகாரியும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்குப் பிறகும் இதில் அரசை குற்றம் சாட்டுவதற்கு ஏதேனும் ‘சந்து பொந்து ‘இருக்கிறதா? என்று தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. காவல் மரணம், போதை மருந்து, பெண்கள் பாதுகாப்புப் பிரச்சனைகளில் தவறு செய்யும் காவல்துறையானாலும் அரசியல்வாதியாக ஆனாலும் சமூக விரோதியானாலும் கடும் நடவடிக்கை எடுக்க...

சமுகநீதி விடுதிகள்

சமுகநீதி விடுதிகள்

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் விடுதிகளாக அழைக்கப்பட்டு வந்தன. `சமூகநீதி விடுதிகள்’ என்றே அழைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பாராட்டி வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். விடுதிகளில் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அந்தத் தலைவரின் பெயர்களோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் ஜாதி அடையாளத்தை அறிவிக்கும் கயிறுகளைக் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று இந்த ஆண்டு பள்ளி திறப்புக்கு முன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி மோதல்களைத் தடுப்பது குறித்து ஆராய நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது. ஆணையம் மிக சிறப்பான பரிந்துரைகளை அரசுக்கு...

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி!

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி!

கழக மாவட்டச் செயலாளர் உமாபதி-பாரதி இணையரின் 21-ம் ஆண்டு இணையேற்பு நாளை முன்னிட்டு கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். மேலும் மதுரை கழகத் தோழர் அழகர் பிரபாகரன் அவரது மகன் இளமகிழன் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 10072025இதழ்

பீகாரில் பில்லி சூனிய‌ நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!

பீகாரில் பில்லி சூனிய‌ நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!

பில்லி சூனியக்காரர் என்று ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகாரில் அரங்கேறி உள்ளது. பியூரின் மாவட்டத்தில் டெட்காமா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் ராம்தேவ் மகத்தோ என்பவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் சிகிச்சைக்கு கிராம வைத்தியர் பாபுலால் ஒரன் (50) என்பவரிடம் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு ஊர்த் தலைவர் முன்னிலையில் கிராம மக்கள் கூடினார்கள். சிகிச்சை அளித்த கிராம வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பில்லி சூனியக்காரர்கள் என்று கிராமத்தினர் முடிவு செய்தனர். அவர்களை கட்டையால் அடித்து சாகடித்து பிறகு தீ வைத்து எரித்து சடலங்களை ட்ராக்டர் ஒன்றில் ஏற்றி கிராமத்தில் குழித் தோண்டி புதைத்தனர். இதில் உயிர் தப்பிய வைத்தியரின் 16 வயது மகன் இந்த தகவலை தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். மாவட்ட காவல்துறை அதிகாரி...

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

5/7/25 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை நங்கநல்லூரில், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தலைமையில், ம.குகாநந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இரண்யா வரவேற்புரையாற்றினார். “சுயமரியாதை இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். வரலாற்று ஆவணமாக இவ்வுரை அமைந்தது. “குடிஅரசு உருவாக்கிய அதிர்வலைகள்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆழமான ஆய்வுரையை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுக்கூட்ட மேடையிலேயே ஆனந்தகுமார் – ஷர்மிளா இணையரின் சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்வு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்மேகம் – வீரமணி – பேரன்பு – திராவிட மகிழன் குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மக்களை சிந்திக்க வைத்தன. தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி நன்றியுரையாற்றினார். களப்பணியாற்றிய தோழர்களுக்கும் கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்களை, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்டத்...

கழக ஏட்டுக்கு நன்கொடை!

கழக ஏட்டுக்கு நன்கொடை!

கழகத் தோழர் இரண்யா தனது மகன் அகராதி பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2000 சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் அஜித் ரூ.1000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 03072025இதழ்

மொக்கைப் பேச்சு அமித்ஷா!

மொக்கைப் பேச்சு அமித்ஷா!

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட இந்திராகாந்தியின் காலம் உண்மையில் “இருண்ட காலம்” தான். தமிழ்நாட்டில் திக, திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மிசா, ஒடுக்குமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சென்னை சிறையில் தாக்கப்பட்டனர். விடுதலை, முரசொலி, தீக்கதிர் நாளேடுகள் கொடூரமான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அக்ரஹார அதிகாரவர்க்கம் விடுதலை நாளேட்டை ஒவ்வொரு நாளும் தணிக்கை செய்த காலத்தில் நான் ‘விடுதலை’யில் பணியாற்றினேன் அடக்குமுறை சூழலை எதிர் கொண்டோம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடும் அது ‘இரண்ட காலம்’ என்பதுதான். ஆனால் `அமித்ஷாக்கள்’ இப்போது காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு இதைப் பயன்படுத்த தீவிரம் காட்டுகிறார்கள். சொல்லப்போனால் மோடியின் ஆட்சி அறிவிக்கப்படாத அவசரநிலை அடக்குமுறை ஆட்சியாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் ஒற்றை சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்ல அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சீர்குலைத்து கருத்துரிமையைப் பறித்து எதிர்க்கட்சிகளை அழித்து ஒழிக்கும்...

ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக் கோயிலில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும். பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக முடியாது என்ற ‘இன ஒதுக்கல்’ சட்டப்படியே நிலை நிறுத்தப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்! அரசியல் சட்டம் தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்து மதம் தீண்டாமையை ஆகமங்களின் பெயரில் புனிதமாக்குகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமையை தீண்டாமைக்கு ஆதரவாக முறைகேடாக பயன்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் துணை போகின்றன என்பதுதான் பேரவலம். ‘பிராமணர்கள்’ மட்டுமே கோயிலுக்குள் நுழைய முடியும் என்ற தீண்டாமை ஒரு காலத்தில் இருந்தது; சாஸ்த்திரமும் அப்படித்தான் கூறியது என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஆலயப்பிரவேச உரிமை என்ற பெயரில் போராட்டங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கம் முதலில் தொடங்கியது. பிறகு காந்தியும் காங்கிரஸும் இந்த போராட்டங்களை நடத்தியது. ஆகம விதிகளைத் திருத்தித்தான் 1959-ஆம் ஆண்டு அனைத்து இந்துக்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கர்ப்பகிரகத்துக்குள் இப்போதும் பார்ப்பனர் அல்லாதவர்களால் அர்ச்சகர் முடியாது...

கண்டா வரச்சொல்லுங்க!

கண்டா வரச்சொல்லுங்க!

சர்வதேச விண்வெளி நிலையமாம்! அங்கே மனிதர்கள் போகிறார்களாம்! நமது பகவான்களும் தேவதைகளும் வாசம் செய்யும் புண்ணிய ஆகாயம் அது. “நாம் ஆண்டுதோறும் தர்ப்பைப்புல் வழியாக தர்ப்பணம் செய்து அரிசி, பருப்பு போன்ற பதார்த்தங்களை பிதுர்களுக்கு பார்சல் செய்கிறோம். அவர்களும் அதை சாப்பிட்டு சகல சௌபாக்கியத்துடன் வாழும் போது இந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஏன் இந்த வீண் வேலை? இது ஆச்சாரத்துக்கு பங்கம் விளைச்சுடும்” இப்படி வேத புரோகிதர்கள் நியாயமாக கேட்டிருக்க வேண்டும்; ஆனால் வாயைத் திறக்கவில்லை. சுபான்சு சுக்லா என்பவர் இப்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மய்யத்துக்கு போய்விட்டார்! அங்கே ஏற்கெனவே பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கிறார்கள். “சூரிய மண்டலத்தில் சூரிய பகவான் ஏழு குதிரைகளைப் பூட்டிய ஒற்றைச் சக்கரம் உள்ள ரதத்திலிருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் உலகத்துக்கு வெளிச்சத்தை தந்து கொண்டு வந்து வருகிறான். `பிராமண’ குடும்பத்துக்கு அவன் தான் தெய்வம். வேத ஆகம மந்திரங்களுக்கு அதி தேவதை” என்று...

கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக திவிக மாநிலத் தலைவர் தோழர் இராவணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூரு ஜெய்பீம் பவன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று தோழர் இராவணன் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்தியாவில் பௌத்தம் முன்னெடுத்த சமத்துவம் குறித்தும், ஆரியர்கள் படையெடுப்பு பற்றியும், ஆரிய பண்பாட்டு படையெடுப்பால் நாம் இழந்தவற்றை திணிக்கப்பட்ட ஆரிய பண்பாட்டில் இருந்து நாம் மீள்வதற்கு பெரியார் கையாண்ட விழாக்கள் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் 03072025இதழ்

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம்03072025இதழ்

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

சென்னை கழக தலைமை அலுவலகத்தில் ஜூன் 29 மாலை 5 மணி அளவில் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் தொழில்நுட்ப அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இரு அணிகளை சேர்ந்த 40 தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், எழுத்தாளர்களை உருவாக்குவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், தோழமை உணர்வை மேம்படுத்துதல், அறிவியல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. மாதம் ஒரு புத்தக திறனாய்வு கூட்டத்தை இளைஞரணி முன்னெடுக்கும். 2. மாதம் இரண்டு தெருமுனை கூட்டங்கள் நடத்துவது 3. ஆண்டுக்கு இரண்டு பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அம்பத்தூர் பகுதியில் பகுத்தறிவு பரப்புரை பிரச்சாரம் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்ப அணி சார்பில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் தொழிட்நுட்ப் அணி சார்பாக புகைப்படக் கருத்து வடிவ உருவாக்கம், காணொலிப் பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, சமூக வலைத்தள செயல்பாடுகள், ஆவணப்படுத்துதல்,...

‘இடையாற்றுமங்கல’ புரட்சி!

‘இடையாற்றுமங்கல’ புரட்சி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். கீழத்தஞ்சையில் மட்டும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். குடந்தையில் அதன் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த ஜோசப்பை லால்குடிக்கு அனுப்பினார் பெரியார். `விளைச்சலைச் சமமாகப் பங்கிடு’, `நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கு’ போன்ற முழக்கங்களை விவசாயக் கூலிகள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தார் ஜோசப். ஊர்வலங்கள், பிரச்சாரங்கள், துண்டறிக்கை விநியோகம் என பெரியார் கொள்கைகளும் சேர்ந்து பரப்பப்பட்டன. பண்ணையாளர்களோடு தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கொண்டையம்பட்டி செட்டியார் பண்ணை படியாததால், அறுவடையை மொத்தமாக எடுத்துக்கொள்வது என முடிவு செய்தனர்....

தமிழ்நாட்டு பள்ளிகளில் ஜாதி கயிறுகளுக்குத் தடை!

தமிழ்நாட்டு பள்ளிகளில் ஜாதி கயிறுகளுக்குத் தடை!

பள்ளிகளில் ஜாதி அடிப்படையிலான மோதல், சமூக வேறுபாடுகளை ஆகியவற்றை தடுத்து, நல்லிணக்கம், நற்பண்புகள் வளர்க்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களை வரிசை மாற்றி அமர வைப்பது, ஆசிரியர்கள் ஜாதிப் பெயர் குறிப்பிடக்கூடாது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் ஜாதிரீதியான சிந்தனை பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஜாதிய மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் தோன்றுவதைத் தடுக்க வேண்டிய முக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியே அனைத்திற்கும் முக்கியம் என கற்பிக்கப்படும் இடத்தில், ஜாதி மாணவர்களின் மத்தியில் மோதலையும், வெறுப்பு உணர்வைத் தூண்டக்கூடாது என்பதில் பள்ளிக் கல்வித்துறை உறுதியுடன் உள்ளது எனவே, இதுபோன்ற உணர்வுகள் மூலம் ஏற்படும் வன்முறைகள் உருவாகுவதைத் தடுப்பதற்காகவும், மாணவர்களுக்கு நல்லிணக்கம். நற்பண்புகளை குறித்து அறிவுரை வழங்குவது தொடர்பான முயற்சியில்...

மகாராஷ்டிராவில் ‘மும்ழொழி’ ரத்தானது

மகாராஷ்டிராவில் ‘மும்ழொழி’ ரத்தானது

ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியைக் கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது. இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என்றார். இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டது...

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

உலகத்தையே உலுக்கியது அகமதாபாத் விமான விபத்து. பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர 234 பயணிகளும் மரணமடைந்து விட்டார்கள். கடவுள் இப்படி ஒரு தண்டனையைத் தர வேண்டுமா? என்ற கேள்வியை கடவுள் நம்பிக்கையாளர்கள் எவருமே கேட்கவில்லை. காசாவில் 54,000 அப்பாவி மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை கடவுள் ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியையும் கடவுளை நோக்கி எவரும் கேட்கவில்லை. இஸ்ரேல் ஈரான் மீது குண்டு வீசுகிறது, ஈரான் பதிலளித்திருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக குண்டு வீசுகிறது. நாட்டில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து வருவேன் என்று கூறிய ‘கிருஷ்ண பகவான்’ ஏன் வரவில்லை என்று எந்த கீதை பக்தர்களாவது கேட்டர்களா? கேட்கவில்லை. மாறாக என்ன நடந்தது? விமான விபத்தையும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பயன்படுத்தினர். விபத்துக்குள்ளான விமானத்தை இஸ்லாமிய நாடான துருக்கியின் நிறுவனம் ஒன்று பராமரிக்கிறது. எனவே விபத்தில் இஸ்லாமிய சதி இருக்கிறது என்றார் ஒருவர். அவர்தான் சங்கிகளின் ஊது குழலான...