அறிவுத் திருவிழாக்கள் பெருகட்டும்!
கோயில் திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் என நம் நாட்டில் எத்தனையோ திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோயில்களில் கூட சைவ, வைணவக் கோயில்களில் ஒரு மாதிரியாகவும், கிராமப்புறங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் வேறு விதமாகவும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சைவ, வைணவக் கோயில்களின் திருவிழாக்கள் மாரியம்மனை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. மாரியம்மன் கோயில் திருவிழாக்களோ ஜாதியை மட்டுமே பொருட்டாக வைத்துக்கொண்டு, யார் பங்கேற்கலாம், யார் பங்கேற்கக் கூடாது என எல்லைக்கோடுகள் வரைந்திருக்கும். அதேபோல குடும்ப விழாக்களிலும் திருமணங்கள் முதல் பூப்புனித நீராட்டு என்பன வரை அனைத்திலும் பிற்போக்குத்தனமே நிறைந்திருக்கும். பொதுவாக கோயில் திருவிழாக்களோ, குடும்ப விழாக்களோ எல்லாவற்றிலும் குடியும், தகராறுமே நிரம்பியிருக்கும். இளைய தலைமுறை கற்றுக்கொள்ளவோ, அறிவைப் பெருக்கிக்கொள்ளவோ இத்தகைய திருவிழாக்களில் எதுவும் இருப்பதில்லை, சீரழிவதற்கான சாத்தியங்களை மட்டுமே நிரப்பி வைத்துள்ளன. ஆனால் இத்தகைய பிற்போக்குத்தனங்கள், சமூக சீரழிவுகளுக்கு மாற்றான ஒரு புதிய கொண்டாட்டத்தை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி. அக்கட்சியின் பவள...
