இட ஒதுக்கீட்டை பகிர்ந்தளித்தவர் கலைஞர்
55. பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்ற இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத புதுமையான திட்டத்தையும் கொண்டுவந்தார். 56. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர அமைப்பு முறை என முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறைவேற்றினார். மெட்ராஸ் மாநகர் சென்னையாக பெயர் மாற்றப்பட்டதும் அப்போதுதான். 57. சாலைகள், பாலங்கள் கட்டமைப்பு, கிராமங்களில் கான்கிரீட் சாலைகள், புதிய தொழில் கொள்கை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி பேருந்துகள், நீர்நிலைகளை தூர்வாருதல் என தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை பலப்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தினார் கலைஞர். 58. குமரிக்கடலில் திருவள்ளுவருக்கு 133 அடியில் பிரமாண்ட சிலை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டுமானம் போன்றவையும் அந்த சமயத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. 59. உலகமயமாக்கலின் வேகத்துக்கு ஈடுகொடுத்து கணினி சார்ந்த படிப்புகளையும், தொழில்களையும் விரிவுபடுத்தினார் கலைஞர். 2000-ம் ஆண்டில் சென்னையில் டைடல் பார்க்கை திறந்துவைத்தார். 60. திமுக ஆட்சியின்...